ஆசிபாவிற்கு நீதிகேட்டு குடியாத்ததில் மஜக கண்டன ஆர்பாட்டம்…!

வேலூர்.ஏப்.22., காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று 22/04/2018 மாலை 4.00 மணியளவில் வேலூர் மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் , S.M.ஷாநவாஸ், T.R. முன்னா (எ) நஸீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வாஸ் அக்மல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் C.அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாநில துணை செயலாளர் திருமங்கலம் #J_ஷமீம் அஹ்மத், INSAAF அமைப்பின் மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி வேல்ராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம், மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப், ஆம்பூர் பிர்தோஸ்,
வாணியம்பாடி நயீம் கான் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதில் சிறுமி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று கண்டன கோஷங்கங்களை முழக்கமிட்டனர்.

குடியாத்தம் நகர பொருளாளர் முபாரக், இளைஞர் அணி செயலாளர் முஹம்மத் கெளவுஸ், குடியாத்தம் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், மற்றும் மாற்று மத சகோதரர்கள் என 200க்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்றனர்.

இறுதியாக குடியாத்தம் நகர செயலாளர் அனீஸ் அஹ்மத் நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி
#MJK_IT_WING
#வேலூர்_மேற்கு_மாவட்டம்
22.04.2018