பஹ்ரைனில் மண்டல மஜக சார்பில் பெருஞ்சிறப்போடு நடந்தேறிய மதநல்லிணக்க (இப்தார்) நோன்பு துறப்பு !

image

image

image

பஹ்ரைன்.ஜூன்.17., மதநல்லிணக்கத்தை வளர்க்க வேண்டும் என்கிற சீரிய நோக்கில் புனித ரமலான் மாதத்தில் அனைத்து  தரப்பு மக்களையும் அழைத்து இப்தார் விருந்து கொடுக்க வேண்டும் என்ற பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி.MLA., அவர்களின் வழிகாட்டுதலின் படி மிகுந்த எழுச்சியோடு நிகழ்ச்சி நேற்று முன்தினம் 15-06-2017 வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தது.

அரங்கமே நிறைந்து இடநெருக்கடி ஏற்படும் அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம், பெரும்பகுதி இஸ்லாமியரல்லாத மக்கள் கலந்து கொண்டு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

தமிழ் சங்கங்களின் நிர்வாகிகள், அனைத்து அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள் .

பாசிசத்தின் பேராபத்து சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி காலத்தின் கட்டாயம் என்று எல்லோரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

பஹ்ரைன் மண்டல மனிதநேய ஜனநாயக கட்சிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு நடைபெறும் முதல் நிகழ்ச்சியே இவ்வளவு பிரமாண்டமாக நடந்தேறியது என சக தோழர்களுக்கு புதிய உற்சாகத்தை தந்திருக்கிறது.

மதவெறி மாயட்டும் ! மதநல்லிணக்கம் தழைக்கட்டும் !!

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
பஹ்ரைன் மண்டலம்
#MJK_IT_WING
16-07-2017