நிலா நிலா பாடலில் திரிவு செய்யப்பட்ட வரிகளில் திருத்தம் தேவை .! சட்டசபையில் ம.ஜ.க பொதுச் செயலாளர் கோரிக்கை…

image

(கடந்த 15.06.17 அன்று கல்வி மானிய கோரிக்கையில் மஜக பொதுச் செயலாளர் சட்டப்பேரவையில் பேசிய பாகம்-2)

நிலா,நிலா ஓடி வா… என்ற பாடல் நமது மழலைகளுக்கு  பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.

அதில் கடைசியாக வரியாக…

“நடு வீட்டில் வைக்க வா
நல்ல துதி செய்ய வா…”
என்று இருந்தது.

தற்போது LKG ,UKG தமிழ்பாட புத்தகம் ராயபேட்டையில் உள்ள சம்பா பதிப்பகம் வெளியிட்டுள்ளது அதில்…

“ஈசன் முன்னால் வைக்கவா…
இனிய துதி செய்ய வா…

என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஈசான் என்றால் சிவன் என்று பொருள்.எனது தொப்புள் கொடி உறவுகளான இந்து சமுதாய மக்கள் வணங்கும் தெய்வங்களில் ஒன்று சிவன்.நானும் அவர்களின் நம்பிக்கையை , வழிபாட்டை மதிக்கிறேன்.

ஆனால் , ஒரு பாடப்புத்தகத்தில் ஒரு பொதுப்பாடத்தில் சிவன் , அல்லாஹ் , ஏசு என்று எந்த கடவுள்களின் பெயரும் வேண்டாம். எனவே இதில் அரசு தலையிட்டு மீண்டும் பழையபடி அதை மாற்றி எழுதவும் , பள்ளிக்கூடங்களில் அதன்படி பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கவும் ஏற்பாடு செய்யும்படி தமிழக அரசை கெட்டுக்கொள்கிறேன்.

தகவல் தொகுப்பு:
மஜக
தகவல் தொழில்நுட்ப அணி
#MJK_IT_WING
17.06.2017