குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை மஹபுலா கிளை நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி…

image

image

குவைத்.ஜுன்.17.,  குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை (IKP) மஹபுலா கிளை சார்பாக நடத்திய “மணங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி” நேற்று16/06/2017 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மஹபுலாவில் மண்டல இஸ்லாமிய கலாச்சார பேரவை செயலாளர் சகோ. இளையான்குடி சீனி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மஹபுலா கிளை துணை செயலாளர் சகோ.ஏர்வாடி ஹசன் முகம்மது அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைக்க. கிளை து.செயலாளர் சகோ.நெல்லை முகம்மது அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகிக்க கிளை பொருளாளர் சகோ.கோட்டைபட்டினம் ஜாபர் அலி அவர்கள் சிற்றுரை நிகழ்த்திய பின் மண்டல செயலாளர் சகோ.முத்துகாப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் நோன்பால் ஏற்படும் மாற்றங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இறுதியாக கிளை செயலாளர் சகோ. கோட்டைபட்டினம் அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை கூறிய பின் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிதனர்.

தகவல்;
மனிதநேய கலாச்சார பேரவை (IKP)
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
குவைத் மண்டலம்.
55278478, 60338005, 65510446.