(பகுதி -4) மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே … மீனவர் சமுதாயத்தின் நலனை கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையிலே பல்வேறு சிறப்பான அறிவிப்புகளை மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள் . அதை வரவேற்கிறேன் . மீனவர்களுக்கு புதிதாக 5 ஆயிரம் வீடுகள் கட்ட 85 கோடிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது . இதில் எனது தொகுதிக்கு உட்பட்ட நாகப்பட்டினம் மீனவர்களுக்கு அதிக முன்னுரிமைகளை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் . சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் நாகப்பட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் . நானும் அமைச்சர்கள் அண்ணன் ஜெயக்குமார் , அண்ணன் O.S.மணியன் ஆகியோரோடும் அங்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டோம் . கண்ணீரோடும் , கதறலோடும் தங்களின் வேதனைகளை கொட்டினார்கள் . அவர்கள் மீது இனியொரு தாக்குதல்கள் நடைபெறுவதையோ , வங்கக் கடலில் தமிழக மீனவர் இனி இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்படுவதையோ இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது . இந்த விசயத்தில் மத்திய அரசு இலங்கையை கடுமையாக எச்சரிப்பதோடு மட்டுமின்றி , தமிழக
தமிழகம்
தமிழகம்
நாகை அரசு மருத்துவமனையில் சுத்திகரிப்பு நீர் மையத்தை திறந்து வைத்தார் MLA!
நாகை. மார்ச்.25., இன்று நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2,10,000) அமைக்கப்பட்ட குடீநீர் சுத்திகரிப்பு நிலையத்தை (R.O. PLANT) M.தமிமுன் அன்சாரி MLA திறந்து வைத்தார். மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளின் நீண்ட கால வேண்டுகோளை நிறைவேற்றியதற்காக மருத்துவர்கள் நன்றி தெரிவித்தனர். இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது பணிக்காலத்தில் நாகப்பட்டினத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வர பாடுபடுவேன் என்று கூறினார். மேலும் நாகை அரசு மருத்துவமனையை எல்லா வகையிலும் தரம் உயர்த்த முயற்சிப்பேன் என்றும், டாக்டர்கள் பற்றாக்குறையை தீர்க்க சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் பேசுவேன் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் ஷேக் அப்துல்லா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், முன்னாள் சேர்மன் மஞ்சுளா, முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தங்க கதிரவன், நகராட்சி ஆணையர் ஜான்சன், உதவி பொறியாளர் வசந்தன் ஆகியோர்ருடன், மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, மருத்துவர்கள் காதர், முருகப்பன், ராஜா மற்றும் மஜக தொகுதி செயலாளர் தமீஜூதீன், நகர பொருளாலர் அஜிசூர் ரஹ்மான் உள்ளிட்டோருடன்
அப்பாவி முஸ்லிம் இளைஞர் கைது களம் இறங்கிய கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு…
கோவை.மார்ச்.25., இந்து முன்னனி பொறுப்பாளர் சசிக்குமார் கொலை வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் அபுதாஹிரை CB CID காவல்துறை கைது செய்துள்ளது. அப்பாவி இளைஞரை மீட்க சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், T.M.S.அப்பாஸ் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 24.03.2017
மஜக திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
திருச்சி.மார்ச்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொருளாளர் அஷ்ரப் அலி துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ஜம்ஜம் பஷீர், ரபீக், காட்டூர் பஷீர் ஆகியோர், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் மைதீன், தொழில்சங்க மாவட்ட செயலாளர் G.K.காதர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது அலி சேட் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் ஆரோக்கியமாக சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.. #தீர்மானங்கள் 1.மஜக இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கிளைகளில் கொடியேற்றி சிறப்பிப்பது எனவும், 2.கோடை காலங்களில் சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தை போக்க பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர் பந்தல் அமைப்பது எனவும், 3.மிக விரைவில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஏக மனதாக முடிவுகள் எடுக்கப்பட்டன. தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WINK திருச்சி மாவட்டம் 24.03.17
சச்சார் கமிட்டி பரிந்துரைகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் தமிமுன் அன்சாரி MLA பேச்சு…
(பகுதி_3) முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார, வாழ்வியல் குறித்த தனது ஆய்வறிக்கையை நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவற்றை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உத்தரவிட்டது. தமிழ்நாட்டில் அது எந்த அளவுக்கு செயல் படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு விரிவான அறிக்கையை நமது அம்மா அவர்களின் அரசு வெளிப்படுத்தினால்,அது பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதில் equal opportunity commission, அமைக்கப்பட வேண்டும் என நீதியரசர் சச்சார் அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார். எனவே, நீதியரசர் சச்சார் அவர்களின் பரிந்துரைப்படி தமிழ்நாட்டில் அத்தகைய ஆணையகத்தை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அமைக்க முன் வரவேண்டும் என்று பேரவை தலைவர் வழியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். #இட_ஒதுக்கீடு இட ஒதுக்கீடு 3.5% முறையாக எல்லா துறைகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 24_03_17