பத்திரிக்கையாளர் தோழர்.திரு.மோகன் (MUJ) காலமானார்.(தினகரன் நாளிதழ்) மஜக நிர்வாகிகள் நேரில் அஞ்சலி!

image

சென்னை.நவ.05., தினகரன் பத்திரிக்கையின் செய்தியாளர் திரு.மோகன் அவர்கள், இன்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மீதும், பொதுச்செயலாளர்
எம்.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் மீதும் மிகவும் நேசம் பாராட்டியவர்.

பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சட்டமன்ற உரைகளை உடனுக்குடன் தொகுத்து செய்திகளாக்கிய ஊடகவியலாளர்களில் இவரும் ஒருவர் என்றால் மிகையில்லை.

பல இளம் செய்தியாளர்களை ஊக்குவித்து, வழிகாட்டிய பெருமைக்குரியவர்.

பல சந்தர்ப்பங்களில், சக பத்திரிக்கையாளர்களின் உரிமைகளுக்காக, சமரசம் இன்றி குரல் கொடுத்தவர்.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக பத்திரிக்கை நண்பர்களுக்கும், அவர் சார்ந்த  பத்திரிக்கை நிறுவனத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று மாலை  சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியி்ல் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில செயலாளர் சாதிக் பாட்சா, மாநில துணைச் செயலாளர் ஷமீம் அகமது, மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை.முபாரக் ஆகியோர் நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

#தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை