சென்னை.ஏப்.18., தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க தலைவர்கள் கூட்டத்தில் மேதகு ஆளுநர் வித்யாசாகர்ராவ் மூலமாக பிரதமர் மோடியை வலியுறுத்தி தீர்மானங்களை அனுப்பி வைப்பது என முடிவெடுக்கபட்டது. அதன்படி இன்று சந்திப்பதற்கு ஆளுநர் மாளிகை அனுமதி வழங்கியிருந்தது, அதனை தொடர்ந்து அனைத்து கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து இன்று (18.04.2017) காலை 11 மணியளவில் கோரிக்கை மனுவினை ஆளுநரிடம் அளித்தனர். தமிழக ஆளுநர் வித்யசாகர் ராவை விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீது M.Com, காங்கிரஸ் கட்சி சார்பில் பவன்குமார், தமாகா சார்பில் கோவை தங்கம், விடியல் சேகர், விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சிவராஜசேகரன், ஜல்லிக்கட்டு மாணவர் இளைஞர் அமைப்பு சார்பில் வேலு, காயத்திரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 17 பிரதிநிதிகள் சந்தித்து விவசாயிகளுக்கான கோரிக்கை மனுவை அளித்தார்கள். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING சென்னை 18-04-2017
தமிழகம்
தமிழகம்
வடசென்னை பகுதியில் மஜகவின் கொடியேற்றம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சி..!
சென்னை.ஏப்.18., மனிதநேய ஜனநாயக கட்சியின் வட சென்னை மாவட்டம் திரு.வி.க. நகர் பகுதி 75-வது வட்டம் (ஓட்டேரி கிளை) சார்பாக கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாவட்ட செயலாளர் S.A. அஸிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் திருமங்கலம் J. ஷமிம் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு மனிதநேய சொந்தங்களுக்கு கழகத்தின் சார்பாக மஜக கிரிக்கெட் அணி பனியன்களை வழங்கி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்விற்கு மாவட்ட துணை செயலாளர் அன்வர் முன்னிலை வகித்தார், வட்ட செயலாளர் செல்வம் மற்றும் பொருளாளர் ரசாக் ஆகியோர் வரவேற்புரை மற்றும் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான மனிதநேய சொந்தங்கள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வடசென்னை. 17.4.2017.
முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,80,000/- நிதி ஒதுக்கிய நாகை எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு!
நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி.MA., அவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர், கிராமவாசிகள், மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், நாகப்பட்டினம் 18.04.2017
திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக SP அலுவலகம் முற்றுகை போராட்டம்…
திண்டுக்கல். ஏப்.17., இன்று காலை 11-மணியலவில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வரும் ஆண்டிகுளம் ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக புகார்அளிதனர், எந்த பலனும் இல்லாத நிலையில் திண்டுக்கல் மாவட்ட SP திரு.சரவணன் அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்துனர். இவை அனைத்தையும் கண்டுகொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாகவும், தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வரும் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர். திரு.சரவணன் அவர்களை கண்டித்து SP அலுவலகம் முற்றுகை போராட்டம் நடந்தது . இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலமையில், மாவட்ட பொருலாளர் U.மரைக்காயர் சேட் முன்னிலையில், மாநில இணை பொதுசெயலாளர் K.M.முகம்மது மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M.அன்சாரி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். உடன் மாநில கொள்கை விளக்க அணி துணை செயலாளர் பழனி சாந்து முகம்மது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர்
எழுச்சியுடன் நடைபெற்ற மஜக தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
தஞ்சை. ஏப்.16., மனிதநேய ஜனநாயக கட்சி தஞ்சை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (16.04.17) மாலை 7.00 மணியளவில் குடந்தை அனஸ் ரெஸ்டாரெண்ட்டில் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் அவர்கள் நீதி போதனையாற்றினார். தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து துரோகம் செய்துவரும் மத்திய மோடி அரசை கண்டித்து எதிர்வரும் 19.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு குடந்தையில் ரயில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மஜக விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக் அவர்கள் தமிழக விவசாயிகள் படும் துன்பங்கள் குறித்து கூறினார்கள். மாநில துணைச் செயலாளர் தோப்புத்துறை சேக் அப்துல்லா அவர்கள் ரயில் முற்றுகை போராட்டத்தை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள் அதனை தொடர்ந்து ஏப்ரல்.30 அன்று சோழபுரம் பொதுக்கூட்டம் அழைப்பு பணிகள் எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியாக குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது யாசின் அவர்கள் நன்றி உரையாற்றினார். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு 16.04.2017.