You are here

முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.3,80,000/- நிதி ஒதுக்கிய நாகை எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு!

image

image

image

image

நாகை. ஏப்.18., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்திடவும், பள்ளிக்கட்டிடங்களுக்கு டைல்ஸ் அமைத்திடவும் தனது தொகுதி நிதியிலிருந்து ரூபாய் மூன்று லட்சத்து எண்பதாயிரம் (3,80,000/-) நிதி ஒதுக்கப்பட்டு  பணிகள் முடிவடைந்துள்ளன.

தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்கி தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி.MA., அவர்களுக்கு பள்ளி  தலைமையாசிரியர், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராம கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர், கிராமவாசிகள், மாணவர்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெறுகிறது.

தகவல்:
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்,
நாகப்பட்டினம்
18.04.2017

Top