விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி ? விவசாயிகளுக்கு ஒரு நீதியா ? மாணவர்கள் சிந்திக்க வேண்டும் ! பட்டமளிப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உரை ! நாகப்பட்டினத்தில் புகழ்பெற்ற EGS பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த ஏப்ரல் 30 அன்று 18வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கலந்துகொண்டார் . தொடர்ந்து 2 மணி நேரம் நின்றுகொண்டே 598 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினார். மருத்துவ ஓய்வு காரணமாக ஒருமாதம் வரை நிகழ்ச்சிகளை ரத்து செய்திருந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அன்பு வேண்டுகோளை ஏற்று, நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அவரது குரல் பலவீனமான இருந்தாலும், கருத்துகள் வீரியத்தோடு வெளிப்பட்டு, பலத்த கரகோஷங்களை பெற்ற வண்ணம் இருந்தது.அவரை பின்னணி இசையுடன் இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று முன்னுரை கொடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் அழைத்தபோது மாணவர்கள் ஆரவாரம் செய்து வரவேற்றனர் . தனது உரையில் , கல்லூரி வாழ்க்கையை வசந்த காலம் என்று வர்ணித்தவர், கல்லூரி முடித்த பிறகு அந்த நாட்களை நினைத்தால் கண்ணீர் முட்டும் என்றார்.
தமிழகம்
தமிழகம்
இளையான்குடி நகர மஜக ஆலோசனை கூட்டம்!
சிவகங்கை.மே.02., இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர் செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் மாநில துனைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் மற்றும் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நேற்று 01-05-2017 நகர அலுவலகத்தில் நடைபெற்றது. கீழ்கன்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1. நகரின் அடிப்படை தேவைகளுக்காக சமீபத்தில் மஜக சார்பில் நடைபெற்ற அறிவிப்பில்லா திடீர் சாலை மறியலின் போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிரைவேற்றும் வரை கவனமாக கண்காணிப்பது. நாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற காலதாமதமானால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்பது. 2. நகரின் 10 வார்டுகளிலும் மஜக கிளை நிர்வாகிகளை நியமிப்பது. 3. நிர்வாக செலவுகளான அலுவலக வாடகை, மின்சாரக் கட்டணம், இதர அலுவலக செலவுகளுக்காக பொதுமக்களை சந்தித்து நன்கொடைகள் பெறுவது. 4. கடந்த வருடங்களை போல எதிர்வரும் ரமலானின் கடைசி பத்தில் ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்) கடமையானவர்களிடம் வசூல் செய்து தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பது. 5. நகரின் முக்கிய அடிப்படை கோரிக்கைகளுக்காக மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, #மௌலா_நாசர் மற்றும் பொதுச்செயலாளர் மு.#தமிமுன்_அன்சாரி (நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட
E.G.S கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பு விருந்தினராக M.தமிமுன் அன்சாரி MLA., பங்கேற்பு!
நாகை. ஏப்.30., நாகப்பட்டினம் E.G.S பிள்ளை கலை, அறிவியல் கல்லூரியின் 2016-2017 க்கான பட்டமளிப்பு விழா கல்லூரி ஆடிட்டோரியத்தில் கடந்த 30-04-2017 அன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மஜக பொதுச் செயலாளருமான M.தமிமுன் அன்சாரி MA.,MLA., அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் கல்லுரியின் சேர்மன் ஜோதிமணி ஜி.எஸ்.பிள்ளை, செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், கல்லூரி முதல்வர் டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பேராசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் பங்கெடுத்தனர். கல்லூரி நிர்வாகமும், பேராசிரயர்களும், மாணவ மாணவிகளும் மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருந்ததால் உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையிலும் சட்டமன்ற உறுப்பினர் பங்கெடுத்து சிறப்பித்துதந்தது அணைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி #MJK_IT_WING நாகை மாவட்டம் 30.04.2017
பி.ஆர்.பாண்டியன் அவர்களை சந்தித்த மஜக நிர்வாகிகள்!
மன்னார்குடி.ஏப்.29., விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் அய்யா பி.ஆர் பாண்டியன் அவர்களை கடந்த 229.04.2017 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது இல்லத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார். சில தினங்களுக்கு முன் நடந்த ரயில்மறியல் போராட்டத்தின் போது கலவரத்தை தூண்டிய காவல்துறையின் அடாவடி போக்குகள் குறித்தும் விசாரித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்களும், ஐக்கிய அரபு அமீரக செயலாளர் மதுக்கூர் அப்துல் காதர் அவர்களும், மத்திய சென்னை மூஸா அவர்களும் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி மனிதநேய ஜனநாயக கட்சி திருவாரூர் மாவட்டம் 29-04-2017
மஜக மாநில பொருளாளர் மே தின வாழ்த்து !
1886 ல் சிக்காகோ நகரத்தில் மே மாதம் 4 ம் நாள் இனி எட்டு மணி நேர வேலை தான் செய்வோம் என தொழிலாளர்கள் எழுப்பிய உரிமை முழக்கம் அவர்களின் உயிர்களை பறிப்பதற்கு காரணமாக அமைந்தது. மனிதகுலம் செழித்து தழைப்பதற்கும், உயிரோட்டமாக இயங்குவதற்கும் உழைப்பாளிகளின் வியர்வையே மூலக்காரணம் என்று சொன்னால் மிகையாகாது. உண்ணும் உணவு தொடங்கி உடுத்தும் உடை வரை, வாழ்வு தொடங்கி மரணம் வரை மனிதகுலத்தின் அனைத்து தேவைகளுக்கும் உழைப்பாளிகளின் தயவே தேவைப்படுகிறது. உழைப்பின் வலிமை உணர்ந்து இனி தொழிலாளர்களை நசுக்காதீர்கள் என கூக்குரலிட்டு வைக்கோல் சந்தை கிளர்ச்சியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஜார்ஜ், ஆல்பர்ட், அடால் ஃபிசர் மற்றும் ஆகஸ்ட் ஸ்பைஸ் உள்ளிட்ட நான்கு பெரும் தூக்கிலப்படுவதற்கு முன்பு கூறிய வார்த்தைகள் உழைப்பாளிகளின் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளது. எங்கள் உயிர் பறிப்பது குறித்து எழும் அடக்குமுறை ஒலியை விட எங்கள் மரணத்தின் நிசப்தம் எதிர்காலத்தில் மிக வலிமையானதாக இருக்கும் என்றார்கள். இன்றைக்கு மே தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. உழைப்பவன் வியர்வை உலரும் முன் கூலியை கொடுத்துவிடுங்கள் என்றார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். இவண் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது. மாநில பொருளாளர், மனிதநேய ஜனநாயக கட்சி 01.05.2017