பண்ரூட்டியில் மஜக சார்பில் நீட் தேர்வை நீக்க கோரியும், அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம்..

image

image

image

கடலூர்.செப்.06., மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு மாவட்டம் பண்ரூட்டி நகரில் நீட் தேர்வை விலக்க கோரியும், மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும் கண்டன பொதுக்கூட்டம் நேற்று
நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாவட்ட செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் தலைமையில், நகர செயலாளர் யாசின் முன்னிலையிலும்,
மாவட்ட துணைச் செயலாளர் அஜீஸ் கான் வரவேற்புரை நிகழ்தினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் நெய்வேலி ஷாஜஹான் அவர்களும், தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர் அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

கண்டன கோஷங்களை
மாணவர் இந்தியா அமைப்பின் மாவட்ட செயலாளர் ரியாஸ் தொடங்கி வைத்தார், மாவட்ட துணைச் செயலாளர் யூசுப், ஒன்றிய செயலாளர் ரஹிம் கான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளும் கண்டனங்களை பதிவு செய்தார்கள்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கடலூர்_வடக்கு_மாவட்டம்.
05.09.2017.