மங்கலம்பேட்டை சமூக நீதி மாணவர் இயக்கம் கலைக்கப்பட்டு மஜகவில் இணைந்தனர்!

image

image

image

கடலூர்.மே.15., இன்று தமுமுகவின் மாணவர் அணியான “சமூக நீதி மாணவர்” இயக்கத்தின் கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை கூண்டோடு கலைக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டோர் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

அனைவருக்கும் மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் வரவேற்று கட்சியின் அடையாள அட்டைகளை வழங்கினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகி மன்சூர், மங்களம்பேட்டை நகர செயலாளர் ஃபைசல் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்
15-05-2017