மஜகவின் சார்பாக ஆவடியில் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு…

image

திருவள்ளூர்.மே.15., இன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நேருபஜாரில் மாடுகள் சாலைகளில் செல்லும் வாகனங்களில் அடிபடுவதாலும் மேலும் சாலையில் கண்டுகொள்ளாமல் திரியும் மாடுகாளல் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதால் உடனடியாக அது போன்ற மாடுகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி ஆவடி நகராட்சி மேலாளரை சந்தித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி திருவள்ளுர் மாவட்ட செயலாளர் ஆணையூர் அக்பர் உசேன் தலைமையில், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், ஆவடி நகரச் செயலாளர் சாகுல் ஹமீத், இளைஞர் அணிச் செயலாளர் கரிமுல்லா ஆகியோர் சென்று மனு அளித்தனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
திருவள்ளூர் மாவட்டம்
15.05.2017