இளையான்குடி நகர மஜக ஆலோசனை கூட்டம்!

image

image

image

சிவகங்கை.மே.02., இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர் செயலாளர் உமர் கத்தாப் தலைமையில் மாநில துனைச்செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் மற்றும் மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது சேட், மாவட்ட துனைச் செயலாளர்கள் ஜெயினுலாபுதீன், அப்துல் ரஹ்மான் முன்னிலையில் நேற்று 01-05-2017 நகர அலுவலகத்தில் நடைபெற்றது.

கீழ்கன்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. நகரின் அடிப்படை தேவைகளுக்காக சமீபத்தில் மஜக சார்பில் நடைபெற்ற அறிவிப்பில்லா திடீர் சாலை மறியலின் போது அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிரைவேற்றும் வரை கவனமாக கண்காணிப்பது. நாம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்ற காலதாமதமானால் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்திப்பது.

2. நகரின் 10 வார்டுகளிலும் மஜக கிளை நிர்வாகிகளை நியமிப்பது.

3. நிர்வாக செலவுகளான அலுவலக வாடகை, மின்சாரக் கட்டணம், இதர அலுவலக செலவுகளுக்காக பொதுமக்களை சந்தித்து நன்கொடைகள் பெறுவது.

4. கடந்த வருடங்களை போல எதிர்வரும் ரமலானின் கடைசி பத்தில் ஃபித்ரா (நோன்பு பெருநாள் தர்மம்) கடமையானவர்களிடம் வசூல் செய்து தேவையுடையோருக்கு பகிர்ந்தளிப்பது.

5. நகரின் முக்கிய அடிப்படை கோரிக்கைகளுக்காக மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, #மௌலா_நாசர் மற்றும் பொதுச்செயலாளர் மு.#தமிமுன்_அன்சாரி (நாகப்பட்டின சட்டமன்ற உறுப்பினர்) அவர்களுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து முறையிடுவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தில் நகர் பொருளாளர் முபாரக் அஹமது, நகர் துனைச் செயலாளர்கள் செய்யது மஹபு, சிராஜ் அஹமது, சதாம் உசேன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஹாஜா முகைதீன், பசீர் அஹமது, ஜமால் முகைதீன், 17 வது வார்டு நிர்வாகி சகுபர் சாதிக், ஆட்டோ சங்க நிர்வாகி அஜ்மல்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
சிவகங்கை மாவட்டம்
01.05.2017