தஞ்சை.ஜூலை.22., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரா பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 57 குடிசைகள் எரிந்து சாம்பலாயின. நேற்று அப்பகுதியை பார்வையிட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MடA அவர்கள், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வருகை தந்தார். அவருடன் மாநில செயலாைர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) செயலாளர் யூசுப் ராஜா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை.முபாரக், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோரும் வருகை தந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று எரிந்த வீடுகளை பார்வையிட்ட பிறகு, மண்டபத்தில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். அங்கு ஜமாத்தினரும், அதிகாரிகளும் வரவேற்று நிலைமைகளை விளக்கினர். இது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும், உரிய இழப்பிடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாகவும் பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார். தகவல்; மஜக தகவல் தொழில் நுட்பஅணி #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம். 22.07.17
தமிழகம்
தமிழகம்
புதிய குடியரசு தலைவருக்கு மஜக வாழ்த்து!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய திருநாட்டின் 14- வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் . அவர் இதற்கு முன்பு ஒரு இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்துபவராக இருந்திருக்கலாம். அதுவே அவருக்கு எதிரான விவாதங்களை கூர்மையாக்கியது. நேற்று முதல் பல்வேறு சாதி , மதங்கள் , இனங்களை சேர்ந்த 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தையும் , பன்மை கலாச்சாரம் கொண்ட தேசத்தின் குடியரசு தலைவர் என்ற அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். அதை உணர்ந்து அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும், பல்வேறு சமூக மக்களின் பண்பாடுகளையும் அரவணைத்து, மதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் ; M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21.07.2017
மஜக பொதுச் செயலாளர் இல்லத்துக்கு முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் வருகை!
வேதாரண்யம்.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இல்லத்திற்கு , முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் MLA அவர்கள் வருகை தந்தார். இருவரும் சென்னை புதுக்கல்லூரியில் படித்தவர்கள் என்பதும் , அபுபக்கர் அவர்கள் சூப்பர் சீனியர் என்பதும் , இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருந்து வருவதும் , குறிப்பிடத்தக்கது. தற்போது அரசியல் ரீதியாக வெவ்வேறு அணியிலும் , கட்சியிலும் இருந்தாலும் அதையும் தாண்டி சட்டசபை நிகழ்வுகளில் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான வகையில் கருத்துகளை பகிர்ந்துக் கொள்ளும் அளவுக்கு நண்பர்களாக இருந்து வருகிறார்கள். அபுபக்கர் அவர்களுடன் , தளபதி ஷபிக்குர் ரஹ்மான் ஹஜ்ரத் , மக்கீன் உள்ளிட்ட IUML -ன் நிர்வாகிகளும் வருகை தந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில துணை செயலாளர் H.சேக் அப்துல்லாஹ் , நாகை தெற்கு மாவட்ட துணை செயலாளர் அ.ஷேக் மன்சூர் மற்றும் வேதாரண்யம் நகர மஜக நிர்வாகிகளும் உடனிருந்தனர். தகவல்: மஜக தகவல் தொழில் நுட்ப அணி #MJK_IT WING வேதை - நகரம் நாகை தெற்கு மாவட்டம்.
மஜக பொதுச் செயலாளருடன் செட்டியார் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!
சென்னை.ஜூலை.21., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, அவர்களை சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் செட்டியார் சமுதாய தலைவர்கள் கடந்த 18.07.2017 அன்று சந்தித்து உரையாடினர். 24 மனை தெலுங்கு செட்டியார்கள் பேரவைத் தலைவர் ஜெகனாத் மிஸ்ரா தலைமையில் ஒரு குழு தங்கள் சமுதாய கோரிக்கைகளை கொடுத்தனர். MBC பிரிவில் தங்கள் சமுதாயத்தை சேர்க்க, சட்டபையில் பேசும் படி கோரிக்கை விடுத்தனர். இதற்குரிய பணிகளை மேற்கொள்வதாக பொதுச்செயலாளர் வாக்குறுதி கொடுத்து, அவர்களது பல்வேறு கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.. தகவல்; மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING 20.07.2017
கோவை மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க ஆலோசனைகூட்டம்..!
கோவை.ஜூலை.20 : மனிதநேய ஜனநாயக கட்சியின் வணிகர் பிரிவான கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் MJVS மாவட்ட செயலாளர் அக்பர், முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் கீழ்கண்ட நிர்வாகிகள் வணிகர் சங்க மாவட்ட துணை செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டார்கள். ஜமேஷா 9566666707 லீட்ஸ் பஷீர் 9444884360 நெளபல் பாபு 9843632902 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. ஆகஸ்ட் 8-ஆம் தேதி அன்று GSTவரி விதிப்பை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நடத்தும் கடை அடைப்பு போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் களந்துகொள்ளும் என்றும், ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடுவது எனவும் முடிவுசெய்யப்பட்டது. மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்திற்குட்பட்ட நகைகடை பிரிவு, ஜவுளிப்பிரிவு, ரெடிமேட் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கு புதிய கிளைகள் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி, #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 19.07.2017.