அய்யம்பேட்டை தீ விபத்து! மஜக தலைவர்கள் பார்வையிட்டனர்!

image

image

image

image

தஞ்சை.ஜூலை.22., தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சக்கரா பள்ளியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 57 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.

நேற்று அப்பகுதியை பார்வையிட மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MடA அவர்கள், அய்யம்பேட்டை-சக்கராப்பள்ளி வருகை தந்தார். அவருடன் மாநில செயலாைர்கள் நாச்சிகுளம் தாஜூதீன், ராசுதீன், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) செயலாளர் யூசுப் ராஜா, மாநில விவசாய அணி செயலாளர் நாகை.முபாரக், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் காதர் பாட்ஷா உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று எரிந்த வீடுகளை பார்வையிட்ட பிறகு, மண்டபத்தில் தங்கியிருக்கும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர்.

அங்கு ஜமாத்தினரும், அதிகாரிகளும் வரவேற்று நிலைமைகளை விளக்கினர்.

இது குறித்து முதல்வர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதாகவும், உரிய இழப்பிடு பெற்று தர மாவட்ட நிர்வாகத்திடம் பேசுவதாகவும் பொதுச் செயலாளர் அவர்கள் கூறினார்.

தகவல்;
மஜக தகவல் தொழில் நுட்பஅணி
#MJK_IT_WING
தஞ்சை வடக்கு மாவட்டம்.
22.07.17