இளையான் குடியில் நடை பெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில்..! மஜக அவைத் தலைவர் நாசர் உமரி பங்கேற்பு..!


சிவகங்கை.பிப்.10.,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கருப்பு சட்டங்களை (CAA, NRC, NPR) கண்டித்தும், சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறக்கோரியும் இந்தியா முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது, தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடர்ச்சியாக 22 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

இதில் கடந்த 08-03-2020 அன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் நாசர் உமரீ அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக ஆக்ரோஷமாக உரை நிகழ்த்தினார்,

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் காஜா மைதீன் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்..

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்
08-03-2020

Top