மயிலாடுதுறையில்… மஜக பொதுக்குழு இறுதிகட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்…

பிப்.26.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் 28.02.2024 அன்று மயிலாடுதுறையில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற உள்ளது.

இறுதி கட்ட பணிகள் குறித்து மயிலாடுதுறை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டகளின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் துணை பொதுச்செயலாளரும், பொதுக்குழு ஏற்பாட்டு குழு தலைவருமான நாச்சிகுளம் தாஜுதீன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுக்குழு ஏற்பாடுகள் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டு ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக குழு அமைக்கப்பட்டது.

இதில் மாநில செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், நாகை முபாரக், அஹமது கபீர், மாநில துணைச் செயலாளர் பேரா. சலாம், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் லியாகத் அலி, அபுதாஹிர், இளைஞர் அணி மண்டல செயலாளர் மிஸ்பா, மயிலாடுதுறை மேற்கு மாவட்ட செயலாளர் ஹாஜா சலீம், மயிலாடுதுறை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மயிலாடுதுறை_மாவட்டம்
26.02.2024.