சென்னை.செப்.03., இன்று சென்னை பத்திக்கையாளர் மன்றத்தில் மாணவர் இந்தியா அமைப்புடன் சேர்ந்து பல அமைப்புகள் இன்று மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை முழுமையாக அகற்ற வலியுறுத்தியும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் அவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து எடுத்த முடிவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஒருநாள் வகுப்பு புறக்கணிப்பை செய்து மாணவி அனிதாவின் கனவான "நீட்''டில்லா தமிழகம் உருவாக ஆதரவழிப்போம் என்றும், அனிதா ஆக்ட் என்ற சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் பேட்டியளித்தார். இச்சந்திப்பில் மாணவர் இந்தியா சார்பில் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர், மாநில துணை செயலாளர் பசீர் மற்றும் ஊடக பிரிவு கார்த்திக், கோட்ஷோ (Cotso) அமைப்பு, டாக்டர்.எழிலன் ஆகியோர் இருந்தனர். தகவல்: மாணவர் இந்தியா ஊடகபிரிவு சென்னை. 03.09.17
தமிழகம்
தமிழகம்
ஆட்டோ டிரைவர்களிடம் குறை கேட்டார் நாகை MLA
நாகை நகரில் தாமரைக்குளம் - செல்லூர் சாலையை சீர்படுத்தக்கோரி பல்லாண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி தமிமுன் அன்சாரி MLA அவர்களின் முயற்சியில் அந்த சாலை தற்போது போடப்பட்டு வருகிறது. இன்று சாலைப்பணியை பார்வையிட்ட M.தமிமுன் அன்சாரி MLA , அச்சாலையில் இயங்கும் ஆட்டோ நிறுத்த நிலைய ஓட்டுநர்களை சந்தித்து உரையாடினார். தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு அவர்கள் MLAவுக்கு நன்றி கூறினர். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் 03.09.2017
மாணவி அனிதாவின் இறுதி சடங்கில் மாணவர் இந்தியா..!
கடலூர்.செப்.03., நீட் தேர்வால் தன்னுடைய மருத்துவ கனவு தகர்ந்த துக்கத்தில் தற்கொலை செய்துக் கொண்ட அனிதாவின் இறுதி சடங்கில் நேற்று கடலூர் வடக்கு மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ் ரகுமான் தலைமையில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர். உடன் மாஜக மாவட்ட இ.அணி துணை செயளாலர் A.மன்சூர், நெய்வேலி நகர இ.அணி செயளாலர் அசார் ஆகியோர் இருந்தனர். அனிதாவின் இழப்பால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அவர்களது குடும்பத்திற்கு அனிதாவின் இறப்புக்கு நீதி கிடைக்கும் வரை மாணவர் இந்தியா உடனிருந்து போராடும் என்று அவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். தகவல்; #மாணவர்_இந்தியா #ஊடகபிரிவு 02.09.17
அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசைக் கண்டித்து கோவையில் மாணவர் இந்தியா ஆர்ப்பாட்டம்!
கோவை.செப்.02., கோவை மாணவர் இந்தியா அமைப்பின் சார்பாக நீட்தேர்வை ரத்துசெய்யக் கோரியும் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசைக் கண்டித்தும் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோவை நாசர், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக் மற்றும் அணி, பகுதி, கிளை, நிர்வாகிகள் ஏராளமாணோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரத்தில் முடிவுசெய்து ஏராளமான மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. தகவல்: #மாணவர்_இந்தியா_ஊடகபிரிவு #கோவை_மாநகர்_மாவட்டம் 02.09.17
IKP நடத்திய தியாகத் திருநாள் திடல் தொழுகை…
சென்னை.செப்.02., இன்று இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை ( IKP) சார்பாக ஈஃதுல் அள்ஹா என்ற தியாகத் திருநாள் தொழுகை மற்றும் பெருநாள் உரை சென்னை ஐஸ்ஹவுஸ் லேடி வெல்லிங்டன் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. டாக்டர் KVS ஹபீப் முகம்மது அவர்கள் பெருநாள் (குத்பா) உரையாற்றினார். பெருநாள் திடல் தொழுகைக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். -IKP ஊடகப்பிரிவு தலைமையகம், சென்னை.