ஆட்டோ டிரைவர்களிடம் குறை கேட்டார் நாகை MLA

image

நாகை நகரில்  தாமரைக்குளம் – செல்லூர் சாலையை சீர்படுத்தக்கோரி பல்லாண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிப்படி தமிமுன் அன்சாரி MLA அவர்களின் முயற்சியில் அந்த சாலை தற்போது போடப்பட்டு வருகிறது. இன்று சாலைப்பணியை பார்வையிட்ட M.தமிமுன் அன்சாரி MLA  , அச்சாலையில் இயங்கும் ஆட்டோ நிறுத்த நிலைய ஓட்டுநர்களை சந்தித்து உரையாடினார்.

தங்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு  அவர்கள் MLAவுக்கு நன்றி கூறினர்.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
03.09.2017