சென்னை.செப்.23., மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியாவின் அடைக்கலம் தர கோரியும், இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை அமைதி திரும்பும் வரை அங்கு திருப்பியனுப்ப கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... ரோஹிங்ய அகதிகளை ஏற்கமாட்டோம் என இந்திய அரசு கூறியிருப்பதும் ஏற்கனவே தங்கியிருக்கும் ரோஹிங்ய அகதிகளை திருப்பி அனுப்புவோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுவதும் மியான்மர் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இனப்படுகொலையை கண்டிக்காததும் வெட்கமானது, கண்டனத்துக்குரியது. இந்தியா சகிப்புத்தன்மைக்காக பெர் போன தேசம். கெளவுதம புத்தரும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், காந்தியடிகளும், பிறந்த தேசத்தில் உயிருக்காக போராடி தஞ்சம் கேட்டு வரும் மக்களை அகதிகளாக அனுமதிக்க மாட்டோம் என்பதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே வங்காளதேசம், திபத் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு அகதிகளாக புகலிடம் தந்தது போல, ரோஹிங்யா மக்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கிட வேண்டும். தனியரசு MLA பேசியதாவது... பௌத்த மதவெறி ஆசிய கண்டத்தை பாழ்படுத்துகிறது. பௌத்த மதவெறிதான் இலங்கையில் தமிழர்களை அழித்தது, இப்போது மியான்மரில் முஸ்லிம்களை அழிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தனது கடும்
தமிழகம்
தமிழகம்
பேரறிவாளன் பரோல் நீடிப்பு ! தமிழக அரசிற்கு மஜக நன்றி !
(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையத்தள பதிவு..) சகோதரர் பேரறிவாளன் பரோல் கிடைக்க மஜக , கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று கட்சிகளும் முன்னெடுத்த நகர்வுகள் முக்கிய காரணமாயிற்று நாங்கள் நேரில் சந்தித்தபோது அன்புத் தாய் அற்புதம்மாள் அவர்களும் சகோதரர் பேரறிவாளனும் கூறிய வார்த்தைகளும் எங்களுக்கு சிலிர்ப்பை தந்தது. அப்போது மேலும் பரோலை நீட்டித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர் முயற்சி செய்கிறோம் என்றோம். கடந்த 20.09.17 அன்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை நாகப்பட்டினத்தில் நேரில் சந்தித்தபோது. இதுகுறித்து விரைவாக எடுத்துக் கூறினேன். நிச்சயமாக ஆவணம் செய்வதாகவும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசிப்பதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களிடமும் கூறினேன். இன்று சகோ.பேரறிவாளனுக்கு பரோல் நீடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. எமது கோரிக்கையை பரிசீலித்ததிற்க்காக தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவண்; M. தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 23.09.17
மஜகவின் தொடர் முயற்சியால் இளையன்குடியில் சமுத்திர ஊரணி தூர்வாரும் பணி துவங்கியது..!!
சிவகங்கை.செப்.23., சிவகங்கை மாவட்டம் இளையான்குடி நகர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நீர் நிலைகளை தூர்வார கோரிய தொடர் முயற்சியின் பயனாக சமுத்திர ஊரணியை தூர்வாரும் பணி நேற்று இனிதே துவங்கியது. நிலத்தடி நீர்குறைந்த இளையான்குடி நகரில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வலியுறுத்தி பல்வேறு முயற்சிகளை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்து வருகிறது. அதன் தொடக்கமாக நீர்நிலைகளை மாசுபடுத்தும் காட்டுகருவேல மரங்களை அப்புரப்படுத்தும் முயற்சியில் பெரியகண்மாயின் கரைகளில் உள்ள காட்டுகருவேல மரங்களை தூரோடு அகற்றும் பணியினை பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அரசின் உதவியுடன் அகற்றியது. நகரின் மத்தியில் உள்ள புதர்மண்டி கிடந்த தெய்வபுஸ்ப ஊரணியை சுத்தம் செய்ய அரசை வலியுறுத்தி டெண்டர் பெற்று சமூக ஆர்வலர் தப்பாத்தை சாகுல் அவர்களுக்கு உதவியது. அதன் தொடர்ச்சியாக மஜக நகர செயலாளர் உமர் கத்தாப் அவர்களின் தொடர் முயற்சியின் காரனமாக கண்மாய்கரை சமுத்திர ஊரணியை சமூக ஆர்வலர்களின் பொருளாதார உதவியுடன் தூர்வார சிவகங்கை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சுந்தர மூர்த்தி அவர்களும், மஜக தலைமை ஒருங்கினைப்பாளர் மௌலா.முகம்மது நாஸர் அவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஊரணி தூர்வாரும் நிகழ்சியில் கூட்டுறவு நகர வங்கி தலைவரும் முன்னால்
சென்னையில் மஜக மாவட்ட நிர்வாகிகளின் சிறப்பான ஏற்பட்டால் உணர்ச்சிமிகு ஆர்ப்பாட்டம்…! ரோஹிங்யா இனப்படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆக்ரோஷமான முழக்கம்..!!
சென்னை.செப்.23., மியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம் இனப்படுகொலையை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் MLA ஆகியோர் கண்டன உரையாற்றினர். மியான்மரில் இனப்படுகொலையை அரங்கேற்றும் ஆங் சாங் சூகியின் உருவப்படத்தை மனிதநேய சொந்தங்கள் எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, A.சாதிக் பாட்ஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், திருமங்களம் சமீம், சைபுல்லாஹ், பல்லாவரம் ஷபி, தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர், மீனவர் அணிச் மாநில செயலாளர் பார்த்திபன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹிர், அப்துல் காதர், யூசுப், மாவட்ட நிர்வாகிகளான பிஸ்மில்லாஹ் கான், நாசர், சிந்தா மதார், ரஹ்மத்துல்லாஹ், அக்பர் ஹுசைன், இக்பால் முன்னாள் மாவட்ட நிர்வாகி அஜீம் ஆகியோர் பங்கேற்றனர். மனிதநேய சொந்தங்கள், பொதுமக்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட துணைச் செயலாளர்களான பீர் முகம்மது,
தமிழக ஹாஜிகள் வருகை..! மஜக பொதுச் செயலாளர் வரவேற்றார்..!!
சென்னை.செப்.23., தமிழக ஹஜ் கமிட்டி சார்பில் புனித மெக்காவுக்கு யாத்திரை சென்று திரும்பிய ஹாஜிகள் தாயகம் திரும்புகின்றனர். இன்று விடிகாலை 1மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய ஹாஜிகளை மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வரவேற்று நலம் விசாரித்தார். பயணங்கள் குறித்த நிறை, குறைகளையும் கேட்டறிந்தார், ரோஜாப் பூக்களின் புன்னகையோடும், அன்று பிறந்த குழந்தைகளைப் போன்ற பூரிப்போடும் திரும்பிய ஹாஜிகளுக்கு சவூதி அரசு வழங்கும் 5லிட்டர் ஜம் ஜம் தண்ணீரையும் வழங்கினார். இந்நிகழ்வில் வடபழனி இமாம் தர்வேஸ் ரஸாதி, மஜக மாநில செயலாளர் தைமிய்யா, மஜக மாநில துணை செயலாளர் ஷமீம் அஹமது ஆகியோரும் கலந்து கொண்டனர். வெளியே ஹாஜிகளை வரவேற்க குடும்பம், குடும்பமாக உறவினர்கள் காத்திருந்தனர். அவர்கள் மஜக பொதுச் செயலாளருக்கு கைக் கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஹாஜிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விமான நிலைய ஊழியர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ்கள், விமான நிலைய காவலர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுடப_அணி #MJK_IT_WING சென்னை 23.09.17