மஜக நெல்லை மாவட்டம் சார்பாக மாநகராட்சி ஆணையரிடம் மனு..!


நெல்லை.செப்.08.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக நெல்லை மாநகராட்சி ஆணையரிடம் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது, மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளை தூய்மைப்படுத்துவது, ஒருங்கிணைந்த இறைச்சிக் கடைகள் நடத்துவதை கைவிட்டு விட்டு அவரவர் இடங்களில் கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கை மனுவை வழங்கினர்.

இந்நிகழ்வில் நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா, நெல்லை பகுதி செயலாளர் கலீல், பேட்டை நகர பொருளாளர் அசன்கனி, MJTS பேட்டை நகர பொருளாளர் ஹபிபுல்லாஹ், மனித உரிமை பாதுகாப்பு அணி செயலாளர் முருகேசன் ஆகியோர் மனுவை நேரில் வழங்கினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
08-09-2020