பேரறிவாளன் பரோல் நீடிப்பு ! தமிழக அரசிற்கு மஜக நன்றி !

image

(மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையத்தள பதிவு..)

சகோதரர் பேரறிவாளன் பரோல்  கிடைக்க மஜக , கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய மூன்று கட்சிகளும் முன்னெடுத்த நகர்வுகள் முக்கிய காரணமாயிற்று

நாங்கள் நேரில் சந்தித்தபோது அன்புத் தாய் அற்புதம்மாள் அவர்களும் சகோதரர் பேரறிவாளனும் கூறிய வார்த்தைகளும் எங்களுக்கு சிலிர்ப்பை தந்தது.

அப்போது மேலும் பரோலை நீட்டித்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர் முயற்சி செய்கிறோம் என்றோம்.

கடந்த 20.09.17 அன்று தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களை நாகப்பட்டினத்தில் நேரில் சந்தித்தபோது. இதுகுறித்து  விரைவாக எடுத்துக் கூறினேன்.

நிச்சயமாக ஆவணம் செய்வதாகவும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. சி.வி. சண்முகம் அவர்களிடமும் கூறினேன்.

இன்று சகோ.பேரறிவாளனுக்கு பரோல் நீடித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

எமது கோரிக்கையை பரிசீலித்ததிற்க்காக தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.சி.வி.சண்முகம் அவர்களுக்கும் மனமார்ந்த  நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்;
M. தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
23.09.17