(பகுதி - 04) பேரவை தலைவர் அவர்களே… உயர்கல்வி படிக்கும் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை குறைக்கும் வகையில் தமிழக அரசாணை எண் 51 மற்றும் 52 ஐ வெளியிட்டுள்ளதாக அறிகிறேன். இதனால் பல கோடிகள் SC/ST மாணவர்களுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட நலத்துறை அமைச்சகம், இதன் உண்மை தன்மை, பிண்ணணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும். பின்தங்கிய நிலையில் இருக்கும், அந்த சமூகத்தை அறிவாசான் அம்பேத்கர் வழியில் முன்னேற்ற உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இந்த கருத்தை பேசுவதர்க்கு முன்பாக அயோத்திதாசர் பண்டிதரின் பெயரால் விருது வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி கூறினார். அவர்தான் "ஒரு பைசா தமிழன்" என்ற பத்திரிக்கையை தொடங்கி தமிழ் இதழியல் துறைக்கு மறுமலர்ச்சி ஊட்டியவர் என்றும் புகழாரம் சூட்டினார். இதற்கு தலித் சமூக MLAக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
சட்டமன்றம்
காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்..! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி 4) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், இரசாயணமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 5 கோடியே 5 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தந்ததற்கும், பாரம்பரிய நெல் இரகங்களை பாதுகாத்து, ஊக்குவிக்கும் முதல் மூன்று விவசாயிகளுக்கு, "பாரத ரத்னா டாக்டர் MGR பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது" வழங்கப்படும் என அறிவித்ததற்கும், நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான #காவிரி_டெல்டா மாவட்டங்களை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ' உடனடியாக அறிவிக்க தமிழக முதல்வர் அவர்கள் துரித நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் காவிரி சமவெளி பாதுகாக்கப்படும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக்கோரிக்கை நீண்ட காலமாக விவசாய சங்கங்களாலும், டெல்டா மாவட்ட மக்களாலும் வலுயுறுத்தப்பட்ட ஒரு கோரிக்கை என்பதும், இதை வலியுறுத்தி இரண்டாவது முறையாக பேசும் #ஒரே_சட்டமன்ற_உறுப்பினர் இவர்தான் என்பது கூறிப்பிடத்தக்கது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
நீட் தேர்வில் இட ஒதுக்கீடு வேண்டும்..! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்..!!
சென்னை.ஜூன்.30., கடந்த (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி : 03) மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... NEET தேர்வு என்பது பின் தங்கிய சமூகங்களுக்கும், கிராமப்புற மாணவ, மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது என்பதாலயே இந்த அவையில் உள்ள அனைவரும் ஒரே குரலில் எதிர்க்கிறோம். தற்போது, இதில் அரசுப் பள்ளிகளில் பயின்று NEET தேர்வில் வெற்றி பெற்றவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வசதி ஏற்படுத்தும் வகையில் 3% சதவித உள் இட ஒதுக்கீட்டை, அதில் வழங்கி சமூக நீதியை நிலை நாட்ட முயற்சி எடுக்க வேண்டும். இது மஹராஷ்டிரா, ஆந்திராவில் நடைமுறையில் உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் J. P நட்டா அவர்கள், 15-04-2018 அன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது, இதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்று கூறியதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
ராமசாமி படையாச்சிக்கு அரசு விழா…! வரவேற்று பேசிய மஜகவுக்கு குவியும் பாராட்டு…!!
சென்னை. ஜூன்.30., சட்டசபையில் கடந்த (29-06-2018) தமிழக முதல்வர் எடப்பாடியார் 110 விதிகளின் கீழ் ராமசாமி படையாட்சிக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என அறிவித்தார். அதற்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவித்து பேசியதாவது. மிக முக்கியமாக தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு முன்னுதரணமாக திகழ்ந்த தலைவர்களில் ஒருவர் பெருமைக்குரிய #ஐயா_ராமசாமி_படையாட்சியார் அவர்கள். வருங்கால தலைமுறை அவரை மறந்துவிடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நமது முதல்வர் அவர்கள் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காக செயல்படக்கூடிய அத்தனை பேரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஓர் அறிவிப்பாக இருக்கிறது. (மேசை ஒலி அதிர்ந்தது) முதல்வர் 110 விதிகளின் கீழ் அறிவித்த பிறகு மு.தமிமுன் அன்சாரி MLA மட்டுமே இதை எழுந்து வரவேற்று பேசினார். இதனால் அதிமுக, திமுக வில் உள்ள வன்னிய சமூக MLA க்கள் அவரை சந்தித்து நன்றி கூறினர். அதன்பிறகு அலைபேசி வாயிலாக பல வன்னிய சமூக பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும், பத்திரிக்கை நண்பர்களும் தங்களது நன்றிகளை கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்.
மொழி வழி சிறுப்பான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் வேண்டுக்கோள்…!!
சென்னை.ஜூன்.30., நேற்று (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே... கடந்த 125 ஆண்டுகளாக வேலூர், சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் நடைமுறையில் இருந்த உருது மொழி சரகங்கள் கலைக்கப்பட்டுள்ளது, அதை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 உருதுவழி தொடக்க, நடுநிலை பள்ளிகளை உள்ளடக்கிய வேலூர் உருது சரகத்திற்கு இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களை வழங்கவும். #உருதுவழி_நிதி உதவிபெரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு BT மற்றும் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம்