புருணையிலிருந்து தாயகம் வந்த தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்த மஜகவினர்!

கோவை:ஆக.04.,

வெளிநாடுகளிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தாயகம் வரும் தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்து கொடுக்க மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களில் விமான நிலைய சேவைக்குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சேவை செய்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக தஞ்சை, மற்றும் நாகூரை சேர்ந்தவர்கள் கடந்த வாரம் புருணைலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அரசு அறிவுறுத்தலின்படி அவர்கள் கடந்த வாரம் முதல் கோவையிலேயே தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் அவர்களை அதிகாரிகள் சொந்த ஊருக்கு அனுப்ப மறுத்ததால் செய்வதறியாது தவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் அன்வர், மற்றும் பைசல், ஆகியோர் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு சென்று அவர்களை சந்தித்து பேசினர் பிறகு இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று வாகன ஏற்பாடுகள் செய்து கொடுத்து அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவை_மாநகர்_மாவட்டம்
04.08.2020