மொழி வழி சிறுப்பான்மையினரின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்…! சட்டப்பேரவையில் மஜக பொதுச்செயலாளர் வேண்டுக்கோள்…!!

சென்னை.ஜூன்.30., நேற்று (29.06.2018) நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம்.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே…

கடந்த 125 ஆண்டுகளாக வேலூர், சேலம், கடலூர் ஆகிய ஊர்களில் நடைமுறையில் இருந்த உருது மொழி சரகங்கள் கலைக்கப்பட்டுள்ளது, அதை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 உருதுவழி தொடக்க, நடுநிலை பள்ளிகளை உள்ளடக்கிய வேலூர் உருது சரகத்திற்கு இரண்டு வட்டார கல்வி அலுவலர்கள் பணியிடங்களை வழங்கவும்.

#உருதுவழி_நிதி உதவிபெரும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு BT மற்றும் தமிழாசிரியர் பணியிடங்களை நிரப்புமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்