ராமசாமி படையாச்சிக்கு அரசு விழா…! வரவேற்று பேசிய மஜகவுக்கு குவியும் பாராட்டு…!!

சென்னை. ஜூன்.30., சட்டசபையில் கடந்த (29-06-2018) தமிழக முதல்வர் எடப்பாடியார்
110 விதிகளின் கீழ் ராமசாமி படையாட்சிக்கு அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என அறிவித்தார்.

அதற்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவித்து பேசியதாவது.

மிக முக்கியமாக தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு முன்னுதரணமாக திகழ்ந்த தலைவர்களில் ஒருவர் பெருமைக்குரிய #ஐயா_ராமசாமி_படையாட்சியார் அவர்கள். வருங்கால தலைமுறை அவரை மறந்துவிடுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் நமது முதல்வர் அவர்கள் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தது, வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டுமல்ல, சமூகநீதிக்காக செயல்படக்கூடிய அத்தனை பேரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சியை தரக்கூடிய ஓர் அறிவிப்பாக இருக்கிறது. (மேசை ஒலி அதிர்ந்தது)

முதல்வர் 110 விதிகளின் கீழ் அறிவித்த பிறகு மு.தமிமுன் அன்சாரி MLA மட்டுமே இதை எழுந்து வரவேற்று பேசினார். இதனால் அதிமுக, திமுக வில் உள்ள வன்னிய சமூக MLA க்கள் அவரை சந்தித்து நன்றி கூறினர்.

அதன்பிறகு அலைபேசி வாயிலாக பல வன்னிய சமூக பிரமுகர்களும், திரைப்பட கலைஞர்களும், பத்திரிக்கை நண்பர்களும்
தங்களது நன்றிகளை கூறினர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சட்டப்பேரவை_வளாகம்.