சென்னை.ஆக.03., தமிழில் 13-ம் நூற்றாண்டுக்கு பிறகு பெருங்காப்பியங்கள் எழுதப்படவில்லை. 16-ம் நூற்றாண்டில் தான் உமறுப்புலவர் அவர்கள் கீழக்கரையின் வள்ளல் சீதக்காதி உதவியோடு சீறாப்புராணம் நூலை எழுதி அந்த குறையை தீர்த்தார். அவருக்கு வருடம் தோறும் தமிழக அரசு விழா எடுக்கும் என்ற கோரிக்கையை வலியுறுத்துமாறு எட்டயபுரத்தை சேர்ந்த உமறுப்புலவர் சங்கத்தினர் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA விடம் கோரிக்கை வைத்தனர். அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி உமா மகேஸ்வரி அவர்களும் இதை வலியுறுத்தினார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இக்கோரிக்கையை M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வலியுறுத்து பேசினார். முதல்வரிடமும் இக்கோரிக்கையை வலியுறுத்தினார். அதனை தொடர்ந்து தமிழக அரசு உமறுப்புலவருக்கு வருடந்தோறும் அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து முதல்வரை சந்திக்க, உமறுப்புலவர் சங்கம், இஸ்லாமிய இலக்கிய கழகம் ஆகியவற்றின் சார்பில், மஜக பொதுச் செயலாளருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. முன் கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வில் பங்கேற்க விருப்பதால் தன்னால் வர இயலாது என தெரிவித்தார். இந்நிலையில் தனது கோரிக்கையை ஏற்று உமறுப்புலவருக்கு அரசு விழா எடுக்கப்படும் என அறிவித்ததற்காக முதல்வர் எடப்பாடி கே
அறிக்கைகள்
உணவு பாதுகாப்பு விதிகள் எளிய மக்களுக்கு எதிரானது…! மஜக கடும் கண்டனம்…!!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) சமையல் எரிவாயு மானியத்தை ரத்து செய்வோம் என்று மத்திய அரசு அறிவிப்பு செய்ததற்கு, நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு அத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருக்கிறது. அதே சமயம் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் அமலுக்கு வருவது குறித்து எழுந்துள்ள எதிர்ப்புக்கு மத்திய அரசு மெளனம் காக்கிறது இதை கண்டிக்கிறோம். மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சலுகைகளை வாரி வழங்கி வரும் நிலையில், ஏழை மக்களுக்கு ரேஷனில் வழங்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு மானியத்தை குறைப்பது என்றும், அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பது என்பதும் கிராமப்புற மக்களையும், நகர்ப்புற ஏழை மக்களையும் வெகுவாக பாதிக்கும் எனவே இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் ரேஷன் வினியோகத்தை முற்றிலுமாக நிறுத்துவதற்கான முன்னோட்ட சதித்திட்டம் என்பதில் ஐயமில்லை. அதே சமயம், தமிழகத்தில் ரேஷன் பொருள்கள் எள்ளளவும் மாற்றமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். இவண், M.தமிமுன் அன்சாரி MLA பொதுச்செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி. 01.08.2017
வந்தே மாதரம் பாடுவதை கட்டாயப்படுத்த முடியாது! மஜக அறிக்கை!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) வந்தே மாதரம் பாடலை கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் பாட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. "தாய்மண்ணை வணங்குவோம்" என்றும் "துர்காதேவியை வணங்குவோம்" என்றும் பொருள்படும் வார்த்தைகளை கொண்ட, அப்பாடல் முஸ்லிம்கள் பின்பற்றும் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது என்ற "ஓரிறை கொள்கை வழிபாட்டு" முறைக்கு எதிரானதாகும். மேலும், கடவுள் மற்றும் மத மறுப்பு கொள்கை கொண்டவர்களுக்கும் இப்பாடல் எதிராக உள்ளது. இப்பாடலை சுதந்திரப் போராட்ட களத்தில், Rss ஆதரவாளர்கள் முன்னெடுத்தப் போது, அதை முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள். அதை காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், நேரு உள்ளிட்டோர் ஏற்றுக் கொண்டனர். பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் இப்பாடலை இயற்றினார். இவர் முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு எதிராக அக்காலத்தில் பல நூல்களை இயற்றியவர். எனவே தான் தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும், போற்றும் வகையில் ரவிந்திரநாத் தாகூர் இயற்றிய "ஜன கன மண கன..." பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்கள். இன்று அனைவரும் அதை மனமுவந்து போற்றிப் பாடுகிறோம். அது போல ராணுவத்தில் பாடப்படும் "சாரே ஜகான் சே அச்சா" என்ற " உலகத்திலேயே சிறந்த
புதிய குடியரசு தலைவருக்கு மஜக வாழ்த்து!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) இந்திய திருநாட்டின் 14- வது குடியரசு தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் . அவர் இதற்கு முன்பு ஒரு இயக்கத்தின் கொள்கையை முன்னிறுத்துபவராக இருந்திருக்கலாம். அதுவே அவருக்கு எதிரான விவாதங்களை கூர்மையாக்கியது. நேற்று முதல் பல்வேறு சாதி , மதங்கள் , இனங்களை சேர்ந்த 125 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவின் முதல் குடிமகன் என்ற அந்தஸ்தையும் , பன்மை கலாச்சாரம் கொண்ட தேசத்தின் குடியரசு தலைவர் என்ற அதிகாரத்தையும் பெற்றிருக்கிறார். அதை உணர்ந்து அனைத்து மாநில மக்களின் உணர்வுகளையும், பல்வேறு சமூக மக்களின் பண்பாடுகளையும் அரவணைத்து, மதிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு, அவருக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண் ; M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக கட்சி 21.07.2017
காமராஜர் என்றும் கருப்பு தங்கம்!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சமூக வலைத்தள பதிவு...) ஏழைக்கு குடும்பத்தில் பிறந்து, தன் அர்ப்பணிப்பு வாழ்க்கையால் அரசியலில் உயர்ந்து, தமிழகத்தை மேன்மைப்படுத்தி, இந்திய அரசியலையே தீர்மானிக்கும் தலைவராக திகழ்ந்தவர் காமராஜர் ஐயா அவர்கள்...! அவரது ஆட்சி காலத்தில்தான் அதிகமான அணைகள் கட்டப்பட்டன. மின் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டன. தொழிற்சாலைகள் பெருகியது. மிக முக்கியமாக ஊர் தோறும் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன. இன்று பல சாதியினரும் சமத்துவ கல்வியை பெற அவரே முழுக்கரணமாக இருந்தார். சத்தமின்றி சமூக நீதியை அமல்படுத்தினார். ஏழை வீட்டு பிள்ளைகள் பசியின் காரணமாக பள்ளிக்கூடங்களுக்கு வராமல் போவதை கண்டு மனம் வெதும்பினார். அதனால் பள்ளிக்கூடங்களில் இலவச மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதன்முறையாக அமுல்படுத்தி சாதனை படைத்தார். அவர் காவி மதவெறி சக்திகளுக்கு எதிராக இருந்தார். மாட்டுக்கறி உண்பது குறித்து அவர் பகிரங்கமாக கூறிய கருத்து நாடெங்கும் வரவேற்பை பெற்றது. அதனால் கோபமடைந்த காவி மதவெறியர்கள் ஊர்வலமாக சென்று டெல்லியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு தீ வைத்தனர். நல்லவேளையாக அவர் நூலிலையில் உயிர் பிழைத்தார். கல்வி கண் திறந்த காமராஜரின் புகழை நாம் போற்ற