நெல்லையில்… மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா…

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்டம் சார்பாக பேட்டையில் இரண்டு இடங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் மாவட்டத்தின் மூத்த நிர்வாகிகள் முருகேசன், அசன் கனி ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அப்பாஸ், ஐடி சங்கர், மற்றும் ஆதிமூலம் உள்ளிட்ட மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
26.01.2024.