சத்தியமங்கலத்தில்… மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நகர செயலாளர் S.R. சலீம் தலைமையில் நடைபெற்ற தேசிய கொடியேற்று நிகழ்வில் இமாம் மவ்லவி ஷபீக் ஆலம் சாஹிப் பங்கேற்று தேசிய கொடியேற்றினார். வழக்கறிஞர் தோழர் சக்திவேல் அவர்கள் தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் S.R. பாபுலால், S.Z.நஜீருல்லாஹ், முகமது பாரூக், சையத் அலி, நகர பொருளாளர் ரசூல், நகர துணை செயலாளர் அமான், மற்றும் முபாரக், மொபைல் பாஷா, ஹாருன், பர்வேஸ் உள்பட மாவட்ட நகர பகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
26.01.2024.