வடசென்னை_கிழக்கில்.. மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா.! மாநில துணைச்செயலாளர் S.M.நாசர் பங்கேற்பு..

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக வடசென்னை கிழக்கு மாவட்டத்தில், திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் இரண்டு இடங்களில் மஜக சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர் அகமது ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்றனர்.

மாநில துணைச்செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான S.M.நாசர் அவர்கள் அனைவருக்கும்
இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட செயலாளர். L ஜாபர் சாதிக், பொருளாளர் M. நிஜாம் பாய், துணைச் செயலாளர் M.S. காசிம் ஷெரீப், தொழிற்சங்க செயலாளர் S.வெங்கடேசன், பொருளாளர் R.N. ஜீலானி அகமத், துணைச் செயலாளர் இளங்கோவன், மருத்துவ செயலாளர் G. மணிகண்டன், பொருளாளர் N. அசார் உசேன், தொழில் நுட்ப செயலாளர் M. J. முகமது ரியாஸ், இளைஞர் அணி செயலாளர் N. அமீர் உசேன், துணைச் செயலாளர் M. J. முகமது பைசல், தொகுதி நிர்வாகி முகம்மது ரஃபி ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வடசென்னை_கிழக்கு_மாவட்டம்
26.01.2024.