பொதக்குடியில்.. மஜக சார்பாக 75வது குடியரசு தின விழா

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளை சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் கிளையின் துணைச் செயலாளர் ஹாஜி முஹம்மது தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயினுதின், மாவட்டத் துணைச் செயலாளர் PH. நத்தர் கனி, கிளை பொருளாளர் ஜலாலுதீன், IKP செயலாளர் எஸ்.அபி, மாணவர் இந்தியா நிர்வாகிகள் முகமது நசீர், முகமது ரபீக், முகமது உசேன், மேலும் கலிபா, ரஜாக், முகமது ஹனிபா, இக்பால் தீன், ஜெகபர்தீன், அன்சார் தீன், முகம்மது அப்ராஸ், பத்ருதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
26.01.2024.