கோவையில்… 75வதுகுடியரசு_தின_விழா.! மஜக மாநில செயலாளர் M.H.ஜாபர் அலி தேசியக்கொடி ஏற்றினார்

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கோவை மாநகர் மாவட்டம், குனியமுத்தூர் மற்றும் காளவாயில் ஆகிய இரு இடங்களில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் MH.ஜாபர் அலி, மாவட்ட துணைச்செயலாளர் ஹனீப் ஆகியோர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினர்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இதில் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் MMR.முஜீப், செயற்குழு உறுப்பினர்கள் ப்ரோஸ்கான், நர்சரி ஷாஜகான், மார்க்கெட் அபி, வரதகரணி செயலாளர் பயாஸ், தெற்கு பகுதி செயலாளர் சதாம் உசேன், துணைச் செயலாளர் முகமது சபி, பகுதி ஆலோசகர் ஜியா உல் ஹக், கனி, சுற்றுச்சூழல் அணி செயலாளர் பெரோஸ், துணைச் செயலாளர் மாரி செல்வம், இளைஞரணி செயலாளர் நவ்ஃபல் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கோவை_மாநகர்_மாவட்டம்
26.01.2024.