You are here

மஜக தலைமையகத்தில்… 75வது குடியரசு தின விழா….மஜக மாநில துணைச்செயலாளர் அஸாருதீன் தேசியக்கொடி ஏற்றினார்..

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய கொடியேற்று நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் அஸாருதீன் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகள் வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாநில துணைச்செயலாளர் எஸ்.எம்.நாசர், இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மாணவர் இந்தியா தலைவர் பஷீர் அஹமது, மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துர்ரஹ்மான்,

மேலும் வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர், செங்கை மாவட்ட செயலாளர் ஜாஹீர் உசேன், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனீஃப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அபுதாஹீர், கதிர் உசேன் மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன், வடசென்னை கிழக்கு மாவட்ட பொருளாளர் நிஜாம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்ரார் மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
26.01.2024.

Top