தோப்புத்துறையில் 75வது குடியரசு தின மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி தேசியக்கொடி ஏற்றினார்..

ஜனவரி.26.,

நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தேசிய கொடியேற்று நிகழ்வுகளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் தொடக்க நிகழ்வாக நாகை மாவட்டம் தோப்புத்துறையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைத்து தேச ஒற்றுமை உறுதிமொழி ஏற்று இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம் உறுதிமொழி கோஷங்களை மஜக-வினர் எழுப்பினார்கள்.

இறுதியாக பங்கேற்ற அனைவருக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் திரு. கருணாஸ் அவர்கள் சந்தன மரக்கன்றுகளை வழங்கினார்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நாகை_மாவட்டம்
26.01.2024.