(மஜக பொதுச்செயலாளர் #M_தமிமுன்_அன்சாரி_MLA வெளியிடும் அறிக்கை) "நிதி ஆயோக்" பரிந்துரை எனும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் பல முடிவுகள் நாட்டை சீர்குலைக்கும் வகையிலே இருக்கின்றன. இப்போது அங்கன்வாடி மையங்களை குறிவைத்திருகிறார்கள். அங்கன்வாடி மையங்களில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் உடனுக்குடன் சமைத்து சுவையான, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்திட மத்திய அரசு திட்மிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நபருக்கு இதற்கு ஆகும் மாதாந்திர தொகையான 180 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது என இதற்கு விளக்கமளித்துள்ளனர். மொத்தமாக ஒரு பொருளை தயாரிக்கும்போது ஆகும் செலவும், தனித்தனியாக தயாரிக்கும்போது ஆகும் செலவும் வெவ்வேறு அளவு கோலானது என்ற அடிப்படை அறிவு, நிதி வல்லுனர்களுக்கு தெரியாமல் போனதா? என்று தெரியவில்லை. 180 ரூபாயில் 1 வாரத்திற்கு கூட ஊட்டச்சத்துக்களை வாங்கிக் கொடுக்க முடியாது. மேலும், இத்தொகையை பெற்றோர்கள் குழந்தைகளுக்குதான் செலவழிப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை. ஊட்டத்சத்து குறைவால், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக் கூடாது என்பதும், அது எதிர்கால இந்தியாவை பாதித்து விடக் கூடாது என்பதும் தான்
அறிக்கைகள்
கெயில் எரிவாயு குழாய் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது! தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA, தனியரசு MLA வேண்டுகோள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA வெளியிடும் கூட்டறிக்கை) கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியே 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 மீட்டர் அகலத்திற்கு எரிவாயு குழாய் பதிக்க இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனம் (கெயில்) மத்திய அரசிடம் அனுமதி பெற்றது. விவசாய நிலங்களை பாதிக்கும் இத்திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் சட்டமன்றத்திலேயே அறிவித்தார்கள். தமிழக அரசின் சார்பில் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறு சீராய்வு மனு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இத்திட்டத்தை பசுமை கொழிக்கும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் அமல்படுத்த முனைவது கண்டனத்திற்குரியது. விவசாய நிலங்களை பாழ்படுத்துவதை அனுமதிக்க முடியது. கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்திலேயே எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களின் வழியேத்தான் எரிவாயு குழாய்கள் பதிப்போம் என அடம் பிடிப்பதை ஏற்கவே முடியாது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளின் வழியாக மட்டுமே
ஆதிதிராவிட மாணவ-மாணவியர்களின், கல்வி உரிமையை பறிக்க வேண்டாம்! தமிழக அரசுக்கு மாணவர் இந்தியா வேண்டுகோள்!
ஆதிதிராவிட சமுதாயம் மற்றும் பழங்குடியின சமுதாய மாணவர்களின் நலன் கருதி, அவர்கள் திரும்ப செலுத்த அனைத்து கல்வி கட்டணங்களையும் அரசே வழங்கும் என அரசாணை எண் 6 மற்றும் 92 சொல்கிறது. இதனை கலை அறிவியல் கல்லூரிகள் முழுமையாக பின்பற்றவில்லை. ஆனால் பொறியியல் கல்லூரிகள் நடைமுறைப்படுத்தி வந்தன. இது குறித்து நீதியரசர் N.V. பாலசுப்ரமணியம் குழு வடிவமைத்த கட்டணத் தொகை பட்டியலின் மாணவ-மாணவிகளுக்கு கிடைத்ததால் அதில் 42 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. தற்போது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் ஆதிதிராவிட, பழங்குடியின, மதம் மாறிய கிருஸ்துவ மாணவ, மாணவிகளின் உதவித்தொகையை தமிழக அரசு குறைத்து அரசாணையை வெளியிட்டுருக்கிறது. இதனால், இதுவரை பலனடைந்துள்ள மாணவ, மாணவிகள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். பலரின் படிப்பு பாதியிலேயே நிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக அரசு இந்த அரசாணையை ரத்து செய்து, பழைய நிலை தொடர ஆவணம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண், #A_முஹம்மது_அஸாருதீன், #மாநில_செயலாளர், #மாணவர்_இந்தியா
பயிர் காப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்குக! மஜக வேண்டுகோள்!
(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட தொகையை பெறுவதில் குழப்பம் நீடித்து வருகிறது. இழப்பீடு தொகை வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. நாகை மாவட்டத்தில் வெண்ணாறு வடிநில கோட்டப் பகுதிகளில், நிலத்தடி நீர் இல்லாததால் பயிரிடப்பட்ட பயிர்கள் முழுமையாக காய்ந்து போய் இருக்கின்றன. இது போன்ற பகுதிகளில் "விளைச்சலில் இழப்பு" என்பதன் அடிப்படையில், காப்பீடு என்பது அநேக பகுதிகளில் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு கிராமங்கள் வாரியாக காப்பீட்டு தொகை வழங்குவதில் பாகுபாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகளிடையே கொந்தளிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு, வருவாய் தீர்ப்பாய சட்டத்தின் அடிப்படையில் 51 சதவீதத்திற்கும் மேல் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முழு பாதிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில், 100 சதவீத இழப்பீட்டுத் தொகையை வழங்க தமிழக அரசு இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் பேச வேண்டும். இது குறித்து சிறப்பு காப்பீட்டிற்கான மாவட்ட அளவிளான கூட்டதை (DLMC) கூட்டி உடனடியாக பாகுபாடு இன்றி காப்பீடு வழங்க பரிந்துரை
R.S.S ஊர்வலத்தை அமைச்சரே தொடங்கி வைப்பதா? தனியரசு MLA, தமிமுன் அன்சாரி MLA, கருணாஸ் MLA கடும் கண்டனம்!
(தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ. தனியரசு MLA, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் M.கருணாஸ் MLA ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை) மதுரையில் எதிர்வரும் 8.10.17 அன்று R.S.S அமைப்பின் ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் தொடங்கி வைப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜ் அவர்கள் இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆட்சியின் போது Rss ஊர்வலத்துக்கு பலமுறை காவல்துறை அனுமதி மறுத்தது. அப்போது நீதிமன்றத்திற்கு சென்று, நீதிபதிகள் பல நிபந்தனைகளை விதித்தப் பிறகே RSS ஊர்வலங்களுக்கு அனுமதி கிடைத்தது. இந்நிலையில் அம்மா வழியில் ஆட்சி செய்வதாக கூறும் முதல்வர் மாண்புமிகு எடப்படியார் ஆட்சியில், RSS ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் இன்றி அனுமதி வழங்கி இருப்பதும், அமைச்சர் செல்லூர்.ராஜ் அவர்கள் தொடங்கி வைப்பதும், அதிமுகவின் கொள்கைகளுக்கும், பொன்மனச் செம்மல் ஐயா MGR, சமூகநீதிக்காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா ஆகியோருக்கும் செய்யும் துரோகமாகும். தமிழ்நாடு அமைதிப் பூங்கா என பெயர் பெற்ற பூமி. இங்கே சாதி, மத வேற்றுமைகளை தாண்டி, தமிழர்கள் சமூக நீதியால் இணைக்கப்பட்டு அண்ணன்-தம்பிகளாக வாழ்ந்து