எலந்தங்குடியில் திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாம்.! முற்போக்கு முயற்சி என மஜக பொதுசெயலாளர் நேரில் வாழ்த்து..!!

image

image

image

image

நாகை.டிச.18., நாகை வடக்கு மாவட்டம், எலந்தங்குடியில் சமூக ஆர்வலர் S.ஹாஜா மைதீன் அவர்களின் திருமண நிகழ்வு நேற்று (17.12.2017) நடைப்பெற்றது.

திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமும் நடைப்பெற்றது.இந்த முகாமில் பல்வேறு மதத்தினர்களும் வருகை தந்து இரத்த தானம் செய்தனர்.

மணமக்களை வாழ்த்த மஜக பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வருகை தந்து வாழ்த்தி விட்டு திருமணத்தை முன்னிட்டு இரத்த தான முகாமை ஏற்பாடு செய்தற்காக பாராட்டுக்களையும் கூறினார்.இது முற்போக்கு முயற்சி என கூறி வாழ்த்தினார்.

தினேஷ் என்ற இரத்த தான கொடையாளிக்கு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார்.

அவ்வூரை சார்ந்த ஜாமத்தினர்களும், பிரமுகர்களும் பொதுசெயலாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

அவ்வூரை சார்ந்த ஏராளமானோர்கள் மஜக பொதுசெயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர்.

எலந்தங்குடியை தொடர்ந்து புறப்பட்டு நீடுர் எஸ்கோயர் சாதிக் இல்ல திருமண விழாவில் பங்கேற்க திருவிட்டச்சேரி புறப்பட்டு சென்றார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் N.M.மாலிக், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜஹான், மாவட்ட துணை செயலாளர்கள் A.J.சாகுல் ஹமீது, அபுசாலிஹ், ஜமில் , சமூக ஆர்வலர் இர்பான் மற்றும் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடனியிருந்தனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_நாகை_வடக்கு_மாவட்டம்