(மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது வெளியிடும் அறிக்கை) தெற்கு ரயில்வே துறை, பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் நோக்கத்தில் ஏற்கெனவே 25 விரைவு ரயில்களுக்கு இருந்து வரும் பிரிமியம் தட்கல் முன்பதிவு முறையை மேலும் 100 விரைவு ரயில்களுக்கு விரிவுபடுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தை முன் அறிவிப்பு இல்லாமல் அமல்படுத்தி இருப்பது தகவல் அறியும் சட்டம் மூலம் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தட்கலுக்கு ஒதுக்கப்பட்ட 30 விழுக்காடு இருக்கையில் இருந்து பிரிமியமுக்கு 15 விழுக்காடு உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. படிப்படியாக ஏற்கெனவே 25 ரயில்களுக்கு பிரிமியம் விரிவு படுத்தப்பட்டிருந்தது. இந்த தட்கல் சிஸ்டம் முறையில் சொற்ப வசதி படைத்தவர்கள் பயனடைந்து வந்தனர். அதில் 15 விழுக்காடு இருக்கைகள் இப்போது அவர்களுக்கும் எட்டாக் கனியாகி விட்டது. தட்கல் முறையில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் 100 ரூபாய் அதிகம் வசூலிக்கப்பட்டது. ஆனால் பிரிமியம் தட்கலில் சாதா வகுப்பு கட்டணத்தை காட்டிலும் 3 மடங்கு கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால் தட்கலில் போகும் வசதி கொண்டவர்களில் பாதி பேர் பயண வாய்ப்பை இழக்கின்றனர். ரயில்வே துறையானது மக்களின் தேவைக்கேற்ப தடங்களின் எண்ணிக்கையையும் ரயில்களின்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
சேலம் மஜக நடத்திய ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி…
சேலம்.ஜுன்.04., இன்று சேலம் ஸ்டோக்ஹால் மண்டபத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மஜக சேலம் மாவட்ட செயலாளர் A.சாதிக் பாஷா தலைமையில், மாவட்ட பொருளாளர் U.அமிர்உசேன் வரவேற்புரையாற்றினார்கள். மாவட்ட நிர்வாகிகள் S.சைய்யத் முஸ்தபா, A.ஷேக் ரபி, Os.பாபு, A.மஹபூப் அலி, A.அம்சத் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com. ஜனாப்.யூசூப் பாஷா KMB Granite நிர்வாக இயக்குனர். தோழர்.ஆ.ஜீவானந்தம் மாநில குழு உறுப்பினர் CPI. ஈரோடு பாபு ஷாயின்ஷா மஜக மாநில செயற்குழு உறுப்பினர். திரு.சன்ஜய் குமார் IPS சேலம் மாநகர காவல் ஆனையர். ஜனாப்.S.R.அன்வர் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லி. ஜனாப்.ஜமாலுதீன் முஸ்லிம் கல்விசங்க செயலாளர். ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். உடன் மாணவர் இந்தியா அஸ்லம்கான், தொழிற்சங்கம் K.சதாம்உசேன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி அப்ரார் பாஷா ஆகியோர் இருந்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. சேலம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017
மஜக விழுப்புரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
விழுப்புரம்.ஜுன்.04., மாடு, எருது, ஒட்டகங்களை, இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் தடை விதித்த மத்திய பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 04/06/17 ஞாயிற்று கிழமை 10-மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹிம் தலைமை தாங்கினார், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் S.முகம்மதுஅலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள். எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com மாநில பொருளாளர் - மஜக குடந்தை அரசன் நிறுவனர் - விடுதலை தமிழ்புலிகள் கட்சி. அ.வ.அப்துல்நாசர் Ex.MLA தலைமை செயற்குழு உறுப்பினர் - தமஜக வழக்கறிஞர். தி.ச.திருமார்பன் மாநில அமைப்பு செயலாளர் - விசிக கடலூர் மன்சூர் தலைமை கழக பேச்சாளர் - மஜக ஆகியோர் மத்திய பாசிச மோடி அரசிற்கு எதிராக அவர்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த கண்டன ஆர்பாட்டதிற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. விழுப்புரம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017
கடலூரில் தபால் நிலையத்திற்கு பூட்டு… மஜக மாநில பொருளாளர் கைது…
கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் மற்றும் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது M.com தலைமையில் நடைபெற்றது. மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரியும், இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்ததை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரியும், சென்னை IIT மாணவன் சூராஜ் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், சூராஜ்ஜை தாக்கிய ABVP குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இப்போராட்டத்தில் கடலூர் மஜக மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் P.ஷாஜஹான், மாநில தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர்கான், அஜிஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரஹ்மான், இளைஞரணி துணை செயலாளர் மன்சூர், மாவட்ட மீணவரணி செயலாளர் சேட், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிராஜ், நெய்வேலி நகர
திருச்சியில் மோடிக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம்..! மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் பங்கேற்பு…!!
திருச்சி.ஜுன்.02., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் மத்தியில் ஆளும் பாசிச மோடி அவர்களுக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மிருகங்கள் வதை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்து மேலும் மாடு மற்றும் ஒட்டகத்தை பலியிடவும் பாஜக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீது M.com அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இப் போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா, பொருளாளர் அசரப்அலி, மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக்தாவூத், ரஃபிக், ஜம்ஜம் பஷீர், காட்டுர் பஷீர் ஆகியோர், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அபுதாஹிர், சென்னை அன்வர், மாணவர் இந்தியா மொய்தீன் அப்துல்காதர், தொழில் சங்கம் G.K.காதர், அயூப் கான், இளைஞர் அணி தென்னூர் சதாம், ஊடக பிரிவு முஹம்மது அலிசேட் ஆகியோருடன் மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கலந்துகொண்டு ஏராளமானோர் கைதாகினார்கள். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING திருச்சி மாவட்டம். 02.06.2017