கோவை:ஏப்23., கோவை அரசு மருத்துவ மனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் டாக்டர்.P.காளிதாஸ், அவர்களை மஜக மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தற்போதைய அசாதாரணமான சூழலில் தன்னலமற்று சேவையாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் ,மற்றும் மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள், ஆகியோர் பணிகளுக்கு மஜக சார்பில் நன்றி தெரிவித்தனர். மேலும் தங்களின் உயிர் காக்கும் பணியில் மஜக வினரும் துணையாய் நின்று செயலாற்றுவோம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதில் IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் கோவை சம்சுதீன், மருத்துவஅணி மாவட்ட
கொரோனா வைரஸ்
கைதிகள் நோன்பு வைக்க உரிய வசதிகளை செய்துதருக, அமைச்சர் CVசண்முகத்திடம் முதமிமுன்அன்சாரி MLA கோரிக்கை!
ஏப்ரல் 23, தமிழக சிறைகளில் புனித ரமலான் மாதத்தில், நோன்புகளை பின்பற்றும் கைதிகளுக்கு வருடந்தோறும் சிறைத்துறை சார்பில் உரிய வசதிகள் சட்டப்படி செய்து கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு கூடுதலாக, விசா குழப்பத்தில் கைதான வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தார்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நோன்பு தொடங்குவதற்கான அதிகாலை சஹர் உணவு, மாலையில் நோன்பை நிறைவு செய்ய இஃப்தார் உணவு ஆகியவை தடங்களின்றி கிடைக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், இன்று மாலை சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.சி.வி.சண்முகம் அவர்களிடம் அலைப்பேசியில் வலியுறுத்தினார். வருடந்தோறும் சட்டப்படி வழங்கும் ரமலான் மாத உணவு முறைகள் அவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வதாகவும் அமைச்சர் அவரிடம் உறுதியளித்தார். இதர விஷயங்களில் அனைத்து கைதிகளுக்குமான கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகவல், #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி, #MJKitWING #தலைமையகம்.
கொரோனா பேரிடர் ஒருங்கிணைப்பு குழுக்களை உடனே அமைக்கவேண்டும்!
மஜகபொதுச்செயலாளர்முதமிமுன்அன்சாரி_MLAவேண்டுகோள்! கொரணா நிவாரண பணிகளில் பலதரப்பட்ட சமூக சேவகர்களை ஒருங்கிணைத்து கூட்டுக் குழு ஒன்றை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி கொரணாவின் தாக்கம் என்பது ஜூன் மாதம் வரை நீடிக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகத்தில் ஊரடங்கு என்பது இன்றோடு ஒரு மாதத்தை நிறைவு செய்கிறது. இது எப்போது முடியும் என்பதை யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்நிலையில் அரசு மட்டுமே இப்பிரச்சனையை முழுமையாக சமாளிக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. தற்போது அரசு ஊழியர்களின் மகத்தான சேவைகள் போற்றுதலுக்குரியது. அது போல் தன்னார்வலர்கள் மிகுந்த ஈடுபாட்டோடு ஆங்காங்கே சேவை செய்கிறார்கள். எனினும் அது ஒழுங்குப் படுத்தப்படாத காரணத்தால் அந்த சேவைகள் கிடைக்கப்பெறாத இடங்களும் அதிகம் உண்டு. எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சமூக அமைப்புகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கொண்ட ஒரு குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டும். இந்த பேரிடர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திட்டமிடலை உருவாக்கி வெற்றிகரமாக பல்வேறு பணிகளை செய்ய முடியும். இதைப் போலவே மாநில அளவில் சமூக அமைப்புகள், கார்ப்பரேட் கம்பெனி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், அரசு
கோவை மாவட்ட மஜக மற்றும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகம் சார்பில் 75 குடும்பங்களுக்குஅத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது!!
கோவை:ஏப்.22., கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து பல குடும்பங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டு கோவை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியும் உக்கடம் காய்கறி சங்க நிர்வாகமும் இணைந்துசுமார் 75 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட துணை செயலாளர் ATR.பதுருதீன், உக்கடம் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன், செயலாளர் சாகுல் அமீது, பொருளாளர் பாபு, முன்னாள் செயலாளர் அப்பாஸ், குத்தகைதாரர் ரஹ்மத்துல்லாஹ், ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருட்களை வழங்கினர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 22.04.2020
இளையான்குடியில் மஜக சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகம்
சிவகங்கை.ஏப்ரல்.22., நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்த தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கபசுரக் குடிநீரை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மஜக சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மஜக தலைமை ஒருகினைப்பாளர் மெளலா நாசர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை மஜக மாநில துணை செயலாளர் பொறியாளர் சைஃபுல்லாஹ் துவக்கி வைத்தார். மேலும் சிவகங்கை மாவட்டச் செயலாளர் காஜாமைதீன், மாநில வர்த்தகர் அணி துணைச் செயலாளர் சாகுல் ஹமீது சேட், தலைமை செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட துணைச் செயலாளர் ஜெயினுலாபுதீன், இளையான்குடி நகர நிர்வாகிகள் சதாம் உசேன், முஸ்தபா, சிராஜுதீன், முகம்மது மகாதீர, மற்றும் குவைத் மண்டல ஆலோசகர் சீனி முகம்மது உள்ளிட்ட மஜகவினர் மக்களுக்கு கபசுரக் குடிநீரை விநியோகித்தனர். தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 21-04-2020