நாகை.மே.19., நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நாகை சடமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கலெக்டர் மூலம் தொடர் முயற்சிகளை மேற்க்கொண்டார். TWAD மூலம் கொள்ளிடத்திலிருந்து தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி பெற்றார். இதுபோக, அந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக தற்போது கீழ்வேளூரில் புதிய ஆழ்துளை கிணறு ரூபாய் 25 லட்சம் செலவில் போடப்பட்டு தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் நாகை நராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. துரித கதியில் செயல்பட்ட கலெக்டர் திரு.பழனிச்சாமி அவர்களுக்கும், நகராட்சி ஆணையர் ஜான்சன் அவர்களுக்கும் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மே, ஜூன், ஜுலை, ஆகஸ்டு ஆகிய நான்கு மாதங்களுக்கான நாகை நகராட்சியின் தண்ணீர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்: நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், 19.05.17
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
மஜக தகவல் தொழில்நுட்ப அணி – MJK IT-WING
பெருந்தோட்டத்தில் பள்ளிவாசல் திறப்பு விழா மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு…
நாகை.மே.19., நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்க பெருந்தோட்டத்தில் இன்று 19.05.2017 வெள்ளிக்கிழமை பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் இணை பொது செயலாளர் K.M.மைதீன் உலவி மற்றும் மாநில துணை செயலாளர் தோப்புத்துறை ஷேக் அப்துல்லா ஆகியோர் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள். இதில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் N. M.மாலிக் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கலந்துக்கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி, #MJK_IT_WING நாகை வடக்கு மாவட்டம் 19.05.2017
கோவை மாவட்ட மஜக நிர்வாகக்குழு! மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!!
கோவை.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் T.K.அப்துல் பஷீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான் ஆகியோர் கலந்துகொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ATR பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS அப்பாஸ், சிங்கை சுலைமான், பாருக், ரபீக், அமீர் அப்பாஸ், பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சுதீர், மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை மாவட்ட செயலாளர் ஹனீபா ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1: பொள்ளாச்சி நகர கூடுதல் பொருப்பாளராக ABT பாருக் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 2: 15 நாளுக்கு ஒரு முறை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் கூட்டுவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 3: கோவைமாவட்ட அலுவலகம் விரைவில் பிரம்மாண்டமாக திறக்கப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கோவை மாநகர் மாவட்டம். 16.05.2017
கல்பாக்கம், கேளம்பாக்கம், மகாபலிபுரத்தில் மஜக கொடி ஏற்றும் நிகழ்ச்சி!
காஞ்சி.மே.17., மனிதநேய ஜனநாயக கட்சியின் காஞ்சி தெற்கு மாவட்டம் சார்பாக நேற்று (16.05.2017) கேளம்பாக்கத்தில் 2-இடங்கள், ECR மகாபலிபுரம், கல்பாக்கத்தில் 6-இடங்களிலும் கொடியேற்று விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் யு.ரஹ்மத்துல்லா தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏ.முஹம்மது யூசுப், மாவட்ட துணை செயலாளர்கள் கேளம்பாக்கம் கே.அப்துல் சர்தார், கல்பாக்கம் எஸ்.சமியுல்லா, மல்லை ஃபாரூக் ஆகியோர் முன்னிலை வகிக்கத்தனர். மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத் M.com அவர்கள் கொடியேற்றி சிறப்பித்து வைத்தார். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் திருப்போரூர் ஏ.முஹம்மது ரஃபீக், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் ஜே.பஷீர், து.செயலாளர் இப்ராஹிம் கனி, ஊரப்பாக்கம் காரணைப்புதுச்சேரி கிளை செயலாளர் சுரேஷ், திருக்கழுக்குன்றம் ஹக்கீம் மற்றும் கல்பாக்கம் கிளை செயலாளர் கே.முஹம்மது காலிஃப், முன்னாள் கிளை செயலாளர் எஸ்.உசேன் அலி மற்றும் கிளைகளின் ஏனைய நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமாஅத்தார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பிறகு லுஹர் தொழுகைக்கு பின் அனைவருக்கும் மதிய உணவு வழங்கி கல்பாக்கம் சகோதரர்கள் அசத்தினர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING காஞ்சி தெற்கு மாவட்டம். 17-05-2017
மஜக மங்கலம்பேட்டை கிளை சார்பில் இரத்ததான முகாம் !
கடலூர்.மே.17., நேற்று கடலூர் வடக்கு மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் MA. ஹாஜி முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நகர செயலாளர் S. ஃபாஸில் முன்னிலை வகித்தார்கள். இம்முகாமை மஜகவின் மாவட்டச் செயலாளர் நெய்வேலி இபுறாகிம் அவர்கள் துவக்கிவைத்தார்கள். இதில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், இளைஞர் அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING கடலூர் வடக்கு மாவட்டம். 16-05-2017