( மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு ) மீண்டும் தமிழ்நாடு இளம் தமிழ் போராளிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்கேற்ற மாணவர்-இளைஞர் சமூகம், பின்னர் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தையும் வழி நடத்தியது. சந்தைப் பொருளாதார யுகம், தகவல் தொழில்நுட்ப மோகம் என உலகம் மாறிய தருணத்தில் 1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகள் மாணவர் போராட்டங்கள் காணாமல் போயின. 2010ல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மாணவர் சமூகம் சோம்பல் முறித்து களமிறங்கியது. லயோலா கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி மாணவர்கள் மூட்டிய நெருப்பு தமிழ்நாட்டை அனலாக்கியது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் சமூக இணைய தளங்களின் வழியாக தன்னெழுச்சியாக மாணவர்கள்-இளைஞர்கள் அணிதிரண்டு அனைவரையும் அதிர வைத்தனர். அது மதுரை, நெல்லை, கோவை என தொடங்கி எங்கும் பற்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க புரட்சிகர போக்காகும். பொது விவகாரங்களில் மாணவர்களும், இளைஞர்களும் களமிறங்கினால் நேர்மையான அரசியலும், நாகரிகமான பொதுவாழ்வும் வலுப்பெறும். நேர்மையான தலைவர்கள் வலிமைப்பெறவும், புதிய தலைவர்கள் உருவாகவும் வழிப்பிறக்கும். எனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்,
செய்திகள்
புதிய மின்மாற்றி அமைக்கும் பணி!
நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்றதும் #M_தமிமுன் அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுமக்கள் அவருடம் மனுக்கள் கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் மின்சாரம் பட்றாகுறையால் (LOW VOLTAGE) மின்சாதன பொருட்கள் எல்லாம் பளுதாகி விடுவதால் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து தறுமாறு கோரிக்கை வைய்தனர். உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அந்த மனு அனுப்பபட்டு அதிகாரிகளையும் தெடர்பு கொண்டு புதிய டிரான்ஸ்பாரம் அமைக்க உத்தரவு விட்டார். தற்போது பணிகள் நடைப்பெறுகின்றது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
விவசாயிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்… மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆழியூர், சங்கமங்கலம், பெருங்கடப்பனூர், பாலையூர், ஐவநல்லூர் கிராமங்களுக்கு ம.ஜ.க. பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M. தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டார். வறட்சி பாதித்த பகுதிகளையும், வறண்டு கிடக்கும் நிலங்களையும் பார்வையிட்டவர், விவசாயிகள் இயற்க்கை இழப்புகளை நம்பிக்கையுடன் எதிர்க் கொண்டு வாழ்ந்து போராடும் உறுதியை பெறவேண்டும் என்று ஆறுதல் கூறினார். நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை 100% வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பதாகவும், விவசாயிகளின் பிரச்னையை அரசின் கவனத்திற்க்கு விரைந்துக் கொண்டு செல்வதாகவும் கூறினார். விவசாய இழப்புகளால் அதிர்ச்சி அடைந்து உயிரிழந்த விவவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கவூம் பரிந்துரைப்பதாக அவர்களிடம் கூறினார். விவசாய சங்கங்களின் தலைவர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில், ம.ஜ.க. விவசாய அணி மாநில செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் ரியாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் அப்துல்லாஹ், தொகுதி செயலாளர் தமிஜுதீன், ஒன்றிய செயலாளர் ஜாகிர், அ.இ.அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குணசேகரன் ஆகியோர் பங்குப் பெற்றனர். தகவல்; ம.ஜ.க. ஊடகப்பிரிவு, நாகை தெற்கு மாவட்டம்.
நாகூர் தர்காவுக்கு சுற்றுலா வந்தவர்கள் குளிக்க சென்றபோது பரிதாபம் : நாகை எம்.எல்.ஏ நேரில் சென்று உடலை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார்…
சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுக்கா பேலூர் நபிகள் நாயகம் தெரு ஹிமாயூன் அவர்களுடைய மகன் சைய்யது மற்றும் அவரது நண்பர் முஹம்மது பாரூக் இருவரும் நாகூர் தர்காவுக்கு சுற்றுலா வந்தவர்கள் கடற்கறையில் குளிக்க சென்றனர். இதில் சைய்யது கடல் அலை அடித்துச் செல்லப்பட்டார். உடனடியாக தீயணைப்பு நிலையத்திர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புதுறையினர் கடலில் இழுத்து செல்லப்பட்டவரை மீட்டனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். தகவல் அறிந்து நாகை MLA தமிமுன் அன்சாரி அவர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்றார். உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு உடல் எடுத்து செல்ல ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நாகூர் கிளைக்கு தகவல் தெரிவிக்க சொன்னார். அதன் அடிப்படையில் நாகூர் TNTJ ஆம்புன்ஸ் உடனடியாக நாகூர் கடற்கரைக்கு வந்து உடலை நாகை அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்படைத்தனர். பின்னர் சேலம் மாவட்ட மஜக செயலாளரை இப்ராஹிமை தொடர்பு கொண்டு சம்பந்தபட்ட குடும்பத்தினர்க்கு தகவல் தெரிவித்து தேவையான உதவிகளை செய்யுதாறு கேட்டுக்கொண்டார். தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
துபையில் மாபெரும் எழுச்சி பலம் காட்டிய மஜக
ஐக்கிய அரபு அமீரகம்- துபையில் நேற்று (06-01-17) மஜக சார்பு வெளிநாடு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவையின் சார்பில் #சமூக_நல்லிணக்க_மாநாடு தனியார் பள்ளி உள் அரங்கத்தில் பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #அமீரக_செயலாளர் #மதுக்கூர்_அப்துல்_காதர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அமீரக பொருளாளர் #அதிரை_அஸ்ரப், IKP செயலாளர் #அப்துல்_ரஹ்மான், அமீரக துணைச் செயலாளர்கள் #அசாலி_அஹமது, #அபுல்_ஹசன்,#பத்தாஹீல்லாஹ், அமீரக ஊடக பிரிவு செயலாளர் #ஜியாவுல்ஹக்,அமீரக மூத்த ஆலோசகர் #சர்புதீன், அனைத்து மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அபுதாபி IKP செயலாளர் #சபியுல்லா_மன்பஈ இறைவசனத்துடன் துவக்கினார், அமீரக துணைச் செயலாளர் #அப்துல்_ரெஜாக் வரவேற்புரை நிகழ்த்தினார். மறைந்த தமிழக முதல்வர் #ஜெயலலிதா_அம்மா அவர்களுடைய பெயர் மாநாட்டு அரங்கத்திற்கு சூட்டப்பட்டிருந்தது. மாநாட்டில், ஆலியா டிரேடிங் நிர்வாக இயக்ககுநர் சேக்தாவூது, ஆரிபா குழுமம் நிர்வாக இயக்குனர் தோப்புத்துறை சுல்தானுல் ஆரிப், மணமேல்குடி நஜிமுத்தீன்,அபுதாபி தமிழ் சங்கம் ரெஜினால்ட் சாம்ஸன்,சமூக ஆர்வலர் சுகைபூதீன்,இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான்,சமூக ஆர்வலர் குத்தாலம் அஷ்ரப்,மர்ஹபா வெல்பேர் அசோசியேசன் ரஃபி முகம்மது, அபுதாபி லால்பேட்டை ஜமாத் தலைவர் யாசர் அரபாத், நாகை மெய்தீன், தொழிலதிபர் சாகுல் ஹமீது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சமூக நல்லிணக்க மாநாட்டில் #மஜக_பொதுச்செயலாளர் #தமிமுன்_அன்சாரி_MLA, தலைமை ஒருங்கிணைப்பாளர் #மௌலா_நாசர்,