(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு) வட இந்தியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. பாமர வட இந்திய இந்து சகோதரர்களை தீவிர இந்துத்துவ வெறியர்களாக்கும் முயற்சியில் காவி மதவெறியர்கள் வெற்றி பெற்று வருகிறார்களோ என அஞ்ச வேண்டியுள்ளது. கடந்த 1 வாரமாகவே மனசு சரியில்லை. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜுனைத் என்ற பதினாறு வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடுமை கண்ணீரை சிந்த வைத்து விட்டது. அவன் இளம் வயதில் தந்தையை இழந்து, கூலி வேலை செய்யும் விதவை தாயின் அரவணைப்பில் வளர்ந்தவன். நோன்பு வைத்துக் கொண்டு, பெருநாளைக்கு புத்தாடை வாங்க, தன் ஏழைத்தாய் சேகரித்த பணத்திலிருந்து 1500 ரூபாயை வாங்கிக் கொண்டு ஹரியானாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டான். தன் அருமை புதல்வன் தனக்கும் சேர்த்து புத்தாடை வாங்கி வருவான், நோன்பை துறப்பதற்கு வீட்டிற்கு வந்து விடுவான் என காத்திருந்த அந்த ஏழை விதவைத் தாய் ஏமாந்து போனாள். அந்தோ...பரிதாபம்! அந்த நோன்பாளியை, ரயிலில் வந்த 'பசு காவலர்கள்' என்ற போர்வையில் திரியும் மதவெறிக் கும்பல், காரணங்களே இன்றி ஜுனைத்தை 'மாட்டுக்கறிக்கு ஆதரவாளன்' என்று
செய்திகள்
தூத்துக்குடி (தெ)மாவட்டம் IKP சார்பில் ஃபித்ரா விநியோகம்…
தூத்துக்குடி.ஜூன்.27.,நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடியில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் பொருட்களாக வழங்கப்பட்டது. இதில் உடன்குடி கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஃபித்ரா பொருட்களை விநியோகம் செய்தனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, தூத்துக்குடி (தெ) மாவட்டம். 25.06.2017
சென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலை இரயில் தடம் ! விரைந்து நிறைவேற்றப்பட வேண்டும்…
(மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் இணையதள பதிவு) சென்னை - கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் புதிய ரயில்பாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருப்பதும் , இதற்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு நல்கும் என நிதியமைச்சர் ஜெயக்குமார் அறிவித்திருப்பதும் வரவேற்கதக்கது. சென்னை - மகாபலிபுரம் - பாண்டிச்சேரி - காரைக்கால் - நாகப்பட்டினம் - வேதாரண்யம் - திருத்துறைப்பூண்டி - அதிராம்பட்டினம் - தொண்டி - இராமநாதபுரம் - கீழக்கரை - தூத்துக்குடி - காயல்பட்டினம் - கன்னியாகுமரி என வழித்தடம் அமைக்கப்பட வேண்டும். இதன் வழித்தடம் கடற்கரையிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். என்பதில் மத்திய - மாநில அரசுகள் உறுதியாக இருக்க வேண்டும் . அப்போது தான் கடற்கரைப்பகுதி மக்களின் வணிகம் , போக்குவரத்து உள்ளிட்ட எதிர்பார்ப்புகளும் அதன் நோக்கமும் நிறைவேறும் . இதை தாமதிக்காமல் , ஐந்தாண்டு கால திட்டமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட வேண்டும் , என கேட்டுக் கொள்கிறோம் . இவண் M.தமிமுன் அன்சாரி MLA பொதுச் செயலாளர் மனிதநேய ஜனநாயக
IKP சார்பாக திண்டுக்கல்லில் ஃபித்ரா விநியோகம்…
திண்டுக்கல்.ஜூன்.27., நேற்று முன்தினம் மஜகவின் மார்க்க பிரிவான இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை சார்பில் திண்டுக்கல்லில் ரம்ஜான் பண்டிகையை ஏழை, எளிய மக்கள் சிறப்பாக கொண்டாடும்வகையில் ஃபித்ரா எனும் தர்மம் பொருட்களாக 400 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மஜக மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் M. அன்சாரி , மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணை செயலாளர் A.அபி, மருத்துவ அணி மாவட்ட செயலாளர், காதர் ஒலி தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா, இளைஞரனி நகர செயலாளர் நிஸ்தார், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ், மாவட்ட துணை செயலாளர்கள் முனாப்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர். தகவல்; தகவல் தொழிநுட்ப அணி, திண்டுக்கல் மாவட்டம். 25.06.2017
தூத்துக்குடி (வ) மானங்காத்தானில் IKP சார்பில் ஃபித்ரா விநியோகம்…
தூத்துக்குடி.ஜூன்.27., நேற்று முன்தினம் இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மானங்காத்தானில் ஏழை எளிய சகோதர, சகோதரிகளுக்கு பெருநாளை சந்தோசமாக கொண்டாட ஃபித்ரா தர்மம் வழங்கப்பட்டது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மானங்காத்தான் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு ஃபித்ரா பொருட்களை விநியோகம் செய்தனர். தகவல்: தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சாரப் பேரவை. மானங்காத்தான். தூத்துக்குடி (வ) மாவட்டம். 25.06.2017