தென்காசியில்… பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சிக்கு மஜக கோரிக்கை….

பிப்ரவரி.16.,

சுற்றுலா தளமான தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை பெறிதும் அச்சுறுத்தி வருகிறது. வெறி நாய்களிடமிருந்து மக்களை காக்க தென்காசி மாவட்ட மஜக சார்பாக கையெழுத்து இயக்கம் மஜக மாவட்ட செயலாளர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பத்தாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராசப்பா சங்கீதம் கமால் அவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையை வலியுறுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்கள் தன் ஆர்வத்துடன் முன்வந்து கையெழுத்திட்டு கோரிக்கைக்கு வழு சேர்த்தனர்.

நிகழ்வின் முடிவில் நகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து குறிப்பிட்ட பகுதிகளில் தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட பொருளாளர் சையது அலி, மாவட்ட துணை செயலாளர் சிக்கந்தர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சதாம் உசேன், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் சேக் முகமது, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மைதீன் பாஷா, ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது, ஒன்றிய ஷாஜகான், நகர இளைஞரணி செயலாளர் முஹம்மது மதர், தென்காசி நகர செயலாளர் தங்கமாரி, நகர பொருளாளர் முஸ்தபா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தகவல்.
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#mjkitwing
#தென்காசி_மாவட்டம்
16.02.2024.