ஒழுங்கு நடவடிக்கை அறிவிப்பு..

கட்சியின் கட்டுக்கோப்பு, கண்ணியம் ஆகியவற்றை பாழ்ப்படுத்தும் வகையில் சிலர் செயல்பட்டதை அடுத்து பின்வரும் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

37 மாவட்டங்கள், மாநில அணிகள் மற்றும் வெளிநாடுகளின் 2 மண்டலங்கள் எழுத்துப்பூர்வமாக அளித்த பரிந்துரையை ஏற்று, மாநில பொருளாளர் எஸ். எஸ். ஹாருண் ரஷீத், அவைத்தலைவர் சம்சுதீன் நாஸர் உமரி, மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல் ஹமீது, கே.ஏ.முஹம்மது சைஃபுல்லாஹ் ஆகிய நான்கு பேரும் கடந்த 31- 1- 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவின் முடிவுகளுக்கு எதிராக செயல்பட்ட காரணத்தினால் அவர்கள் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

இந்த முடிவுகள் இன்று நடைப்பெற்ற செயற்குழுவை தொடர்ந்து மாலையில் நடைபெற்ற சிறப்பு நிர்வாக குழுவிலும் விரிவாக விவாதித்து வெளியிடப்படுகிறது.

இவண்

மு தமிமுன் அன்சாரி,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
07-02-2023