வேலூர்.ஆக.11., தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி வேலூர் மாநகரில் படிப்படியாக பல பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி சார்பாக தொடரப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இன்று 11.08.2017 வெள்ளிக்கிழமை வேலூர் பழைய பேருந்து நிலையம், பள்ளிவாசல் அருகில் இன்று மதியம் மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்சர் சையத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைப்புக்குழு பொறுப்பாளர்கள் முஹம்மத் ஜாபர், முஹம்மத் வசீம், முஹம்மத் யாசீன், ஜாகீர் உசேன், சையத் உசேன் மற்றும் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரபீக் ரப்பானி ஆகியோர் மற்றும் பல்வேறு கிளை மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம். 11.08.17
செய்திகள்
நிலம் கொடா இயக்க பிரச்சாரக் குழு வாகனம் நாகப்பட்டினம் வருகை! மஜக மாநில விவசாய அணி செயலாளர் தலைமையில் வரவேற்பு!
#காவிரியை_மீட்போம்! #மண்ணை_காப்போம்! நாகை.ஆகஸ்ட்.11., கடந்த (07/08/2017) திங்கள் அன்று திருவாரூரில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டுயக்க தலைவர் தோழர் P.R.பாண்டியன் அவர்களின் அழைப்பை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான #M_தமிமுன்_அன்சாரி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்த நிலம் கொடா இயக்க பிரச்சார பயண வாகனம் பல்வேறு ஊர்களில் தனது பரப்புரையை செய்துகொண்டு இன்று முத்துப்பேட்டைக்கு நகருக்கு வருகை தந்தது. அப்போது #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் சார்பிலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் வர்த்தக கழகத்தின் சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று நாகப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தின் போது மஜகவின் மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை.முபாரக் அவர்கள் தலைமையில் மஜக நிர்வாகிகள் தோழர் P.R. பாண்டியன் அவர்களை வரவேற்று சால்வை அணிவித்து பிரச்சார பயணம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். தோழர் P.R. பாண்டியன் அவர்கள் தனது உரையில் நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார். மேலும் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்றத்தில்
நாகை சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.4 இலட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைப்பு…
நாகை.ஆக.11., நாகப்பட்டினம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் நிதியில் இருந்து சாலை அமைக்கப்பட்டது. திட்டச்சேரி பேரூராட்சி நைனார் புதுத்தெரு-வில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி 2016-17-ல் இருந்து ரூபாய் 4லட்சம் மதிப்பீடு கொண்ட 80மீட்டர் தொலைவிற்கு பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 11/08/2017
கம்பம் பெரியபள்ளி ஜமாத் தலைவருடன் மஜக மாநில பொருளாளர் சந்திப்பு!
தேனி. ஆக.11.,கடந்த சில தினங்களாக தேனி மாவட்டம் முழுதும் கட்சி சுற்றுபயணத்தில் இருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்கள், கம்பம் பெரிய பள்ளிவாசலுக்கு வருகை புரிந்து ஜமாத் தலைவர் பாவா ஃபதுருதீன் மற்றும் பள்ளி நிர்வாகிகளுடன் அரசியல் நிகழ்வு மற்றும் பொதுவாழ்வு பற்றி கலந்துரையாடினார்கள். இந்த சந்திப்பு மிக்க மகிழ்சியை தந்தது. இச்சந்திப்பில் மாநில துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கம்பம் கரிம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் சிக்கந்தர் பாஷா, கம்பம் தன்விர் ஆகியோருடன், மாவட்ட செயலாளர் கம்பம் ரியாஸ், மாவட்ட பொருளாளர் பெரியகுளம் ஷேக், மாவட்ட துணை செயலாளர்கள் என்.டி.பட்டி அனிஸ், காதர், ஜாஃபர் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் கம்பம் நகர நிர்வாகிகள் களந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING தேனி மாவட்டம். 10.08.2017
முரசொலிக்கு மஜக சார்பில் பவளவிழா வாழ்த்து !
(முரசொலி பவளவிழாவில் பங்கேற்க மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA , தனியரசு MLA , கருணாஸ் MLA ஆகியோருக்கு திமுக செயல் தலைவர் மாண்புமிகு அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள். மற்ற இருவரும் அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்கள். மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் அண்ணன் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துசெய்தி அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது…,) தமிழ் சமுதாயத்தில் கடந்த 75 ஆண்டுகாலமாக மாபெரும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஊடகமாக முரசொலி திகழ்ந்து வருகிறது. கலைஞரின் முயற்சியில் உருவாகி , அவரால் 75 ஆண்டுகளாக இப்பத்திரிக்கை வழிநடத்தப்பட்டிருக்கிறது என்பது பெரும் ஆச்சர்யத்தை தருகிறது. ஒரு ஊடகத்தை உருவாக்கியவரின் தலைமையிலேயே , அது 75 ஆண்டுகள் இயங்கி வருவதும் , அந்த நிறுவனமும் , உருவாக்கியவரும் 75 ஆண்டுகள் ஒன்றாய் பயணிப்பதும் ஒரு அரிய வரலாற்று நிகழ்வாகும் . எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய கலைஞரின் சாதனைகளில் அதுவும் ஒன்றாகும். முரசொலி , அரசியல் தாக்கத்தை கடந்து , சமுதாய விழிப்புணர்வு பணிகளிலும் சமரசமின்றி அறிவொளியை பாய்ச்சிய பத்திரிக்கை என்பது அதன் கூடுதல்