(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் எஸ்.கருணாஸ் MLA, ஆகியோர் வெளியிடும் கூட்டறிக்கை..) பாஜக பிரமுகர்களான H.ராஜா அவர்களும், S.V சேகர் அவர்களும் சமீபத்தில் பெண்கள் குறித்து வெளியிட்ட கருத்துகள் நேர்மையான அரசியலுக்கும், நாகரீக பொதுவாழ்வுக்கும் எதிரானதாகும். பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் சமூகமே, நாகரீக சமூகமாகும். பெண்களை தரக்குறைவாக விமர்சிக்கும் நபர்கள் இத்தகைய பட்டியலில் இடம் பெற முடியாது. S.V.சேகர் அவர்கள் வேறு ஒருவருடைய கருத்தை, கவனக்குறைவாக பகிர்ந்ததாக கூறியதை ஏற்காத, பத்திரிக்கையாளர்கள் அவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அதில் சிலர் கோபத்தில் கல்வீச்சில் ஈடுபட்டது ஏற்புடைய செயல் அல்ல, அதே நேரம் H. ராஜா அவர்களையும், S.Vசேகர் அவர்களையும் கைது செய்ய தயங்கும் காவல்துறை, S.V சேகர் வீட்டின் மீது கல்வீச்சு நடத்திய பத்திரிக்கையாளர்களை மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய துடிப்பதன் பிண்ணனி என்ன? என்பதை அறிய விரும்புகிறோம். டெல்லியிலிருந்து, தமிழகத்தில் செயல்படும் ஊடகளுக்கும், அதன் ஆசிரியர்களுக்கும் திட்டமிட்டு கொடுக்கப்படும் நெருக்கடிகளை தமிழகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு, இவ்விஷயத்தில்
செய்திகள்
திண்டுக்கல் மஜக கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..!
திண்டுக்கல்.ஏப்.24., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் (16-வார்டு) கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கிளை செயலாளர் ஜவஹர் அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் (22.04.2018) நடைபெற்றது. கிளை பொருளாளர் அலி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொருளாளர் M.அனஸ் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் சேக்பரீத் ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் 16 வார்டு பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது என இறுதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம் 23.04.2018
வேலூரில் மஜகவின் தண்ணீர் பந்தல்!
வேலூர்.ஏப்.24., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தண்ணீர் பந்தல் நிகழ்ச்சி மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் (MJVS) மாவட்ட செயலாளர் #பட்டேல்_முஹம்மத்_ஷமீல் அவர்கள் தலைமையில் நேற்று நடைப்பெற்றது. இதில் மஜக மாவட்ட துணை செயலாளர்கள் #ஜாகிர்_உசேன், #சையத்_உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட செயலாளர் #முஹம்மத்_யாஸீன் அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார். பொதுமக்கள் தாகம் தீர்க்கும்வகையில் மோர், வெள்ளரி, தர்பூசணி ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 3ஆம் மண்டல பொருளாளர் ஷேக் இம்ரான், துணை செயலாளர் ஆசிப் அப்ரோஸ், ரிஸ்வான், காதர், 30வது கிளை செயலாளர் மாலிக், துணை செயலாளர் அமானுல்லாஹ், அத்திக்குர் ரஹ்மான், அப்சல் பாஷா, சுல்தான், சித்திக், இஸ்மாயில் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_கிழக்கு_மாவட்டம். 23.04.2018
காவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது.! புழல் சிறையில் சந்தித்த மஜக நிர்வாகிகள்..!
சென்னை.ஏப்.24., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளை,நேற்று புழல் மத்திய சிறையில் நேரில் சென்று சந்தித்த மஜக நிர்வாகிகள். இதில் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்து முஹம்மது, திண்டுக்கள் மாவட்ட செயலாளர் பாஷா, நாகை மாவட்ட பொருளாளர் ஜஹபர் சாதிக், தமாம் மண்டல நிர்வாகி ஜாஹிர் உசேன், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கய்யூம், வில்லிவாக்கம் ஷாகுல் ஹமீது, மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை. 24.04.2018
ஆசிபாவுக்கு நீதி கேட்டு அய்யம்பேட்டையில் மஜக தலைமையில் அனைத்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
குடந்தை.ஏப்.23., நேற்று (22.04.18) மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) அய்யம்பேட்டை கிளை சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு நகர செயலாளர் சேக் தாவூத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட மு.வர்த்தக அணி செயலாளர் நூர்தீன் ஒன்றிய செயலாளர் தீன் முஹம்மது நகர து.செயலாளர் உமர் பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில கொள்கை விலக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத் மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மாவட்ட து.செயலாளர்கள் நிஜாம் மைதிக்ன், உஸ்மான் அலி , முஹம்மது இஸ்மாயில் , பரக்கத்துல்லாஹ் , சேக் அப்துல்லாஹ் ஒன்றிய செயலாலர் இப்ராஹிம், விசிக தஞ்சை மண்டல செயலாளர் விவேகானந்தர், IMUL மாவட்ட செயலாளர் K.Mஅப்துல் காசிம், SDPI மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, IJK மாவட்ட செயலாளர் முத்தராஜன், சிறுபான்மை நல குலு மாவட்ட செயலாளர் P.M காதர் உசைன், CPM மாவட்ட பொதுக்குழு P.குணசேகரன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் தூயவன் ஆகியோர் கண்டன