ஆசிபாவுக்கு நீதி கேட்டு அய்யம்பேட்டையில் மஜக தலைமையில் அனைத்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

குடந்தை.ஏப்.23., நேற்று (22.04.18) மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) அய்யம்பேட்டை கிளை சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு நகர செயலாளர் சேக் தாவூத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட மு.வர்த்தக அணி செயலாளர் நூர்தீன் ஒன்றிய செயலாளர் தீன் முஹம்மது நகர து.செயலாளர் உமர் பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில கொள்கை விலக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத் மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மாவட்ட து.செயலாளர்கள் நிஜாம் மைதிக்ன், உஸ்மான் அலி , முஹம்மது இஸ்மாயில் , பரக்கத்துல்லாஹ் , சேக் அப்துல்லாஹ் ஒன்றிய செயலாலர் இப்ராஹிம், விசிக தஞ்சை மண்டல செயலாளர் விவேகானந்தர், IMUL மாவட்ட செயலாளர் K.Mஅப்துல் காசிம், SDPI மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, IJK மாவட்ட செயலாளர் முத்தராஜன், சிறுபான்மை நல குலு மாவட்ட செயலாளர் P.M காதர் உசைன், CPM மாவட்ட பொதுக்குழு P.குணசேகரன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் தூயவன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_தஞ்சை_வடக்கு_மாவட்டம்.22.04.2018