சென்னை. டிச.06., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக தாம்பரத்தில் டிசம்பர்-6 போராட்டம் மிகுந்த எழிச்சியுடன் நடைபெற்றது. தாம்பரம் வீதிகள் எங்கும் மஜக கொடிகளும் பேனர்களும் நகரையே பரபரப்பாக்கியது. ஷண்முகம் சாலை திறும்பும் இடமெல்லாம் ஊர்மக்கள் திரண்டிறுந்தனர். காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரனி MLA அவர்கள் பாஜவின் மதவாதத்தை தோலுரித்து விளக்கமாக பேசினார். நிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில் இந்துக்களை உயர்வாக எழுதியிருப்பதையும், அயோத்தியில் உள்ள கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது குறித்தும், பாபர் மீது போடபட்ட பழிகள் பின்னனி குறித்தும் விரிவாக பேசினார். போக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி முடிந்தபிறகு திரு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வருகை தந்தார். அருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த மக்களிடம் அவர் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார். அப்போது பாபர் மசூதி இடிப்பு ஒரு அழியாத களங்கம் மீண்டும் அங்கே மசூதியை கட்டிகொடுப்பதுதான் தர்மம், பாபர் மசூதி இடிக்கபட்ட பிறகு திருவணந்தபுரத்தில் முஸ்லிம்கள் ஒரு கண்டன மாநாடு நடத்தினார்கள் அதில் நான் பங்கேற்றி உறையாற்றி, பாபர் மசூதியை கட்ட அப்போது, என் சார்பாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன். பாபர்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
தடையை உடைத்த மஜக.! பெரும் எழுச்சியோடு மக்கள் திரண்டனர்…!! திணறிய கோவை ரயில் நிலையம்..!!!
#தடையை_உடைத்த_மஜக.! #பெரும்_எழுச்சியோடு_மக்கள்_திரண்டனர்...!! #திணறிய_கோவை_ரயில்_நிலையம்..!!! கோவை.டிச.06. கோவையில் டிசம்பர்6 அன்று மஜக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை பெரும் பரபரப்பாக மாறியது. காலையிலேயே கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் மஜகவினர் முழக்கங்கள் எழுப்பியபடியே மோட்டார் பைக்குகளில் இரயில் நிலையம் நோக்கி அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தனர். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை. மஜக சார்பில் மாநகர் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத படவில்லை, பேனர்கள் வைக்கப்படவில்லை காரணம் தடையை மீறிய போராட்டம் என்பதால் காவல் துறை இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை, வெறும் துண்டு பிரசுரங்களும், போஸ்டர்களிலும் மக்களை உசுப்பினர். சொந்த சிலவில் தன்னெழுச்சியாக மஜகவினர் வாகனங்களை எடுத்து கொண்டு, பெரும் எழுச்சியோடு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார். இதில் தலைமையகத்தின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் கண்டன உரையாற்றினார். இது தவிர மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட துணைசெயலாளர் ABT.பாருக் ஆகியோர் உரையாற்றினார்கள். தடையை மீறிய போராட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மஜகவினர் பெரும் எழுச்சியோடு பங்கேற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜக தொண்டர்கள் ரயில் நிலையத்தை நோக்கி
நாகை தெற்கு மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போர். .! கட்சி நிர்வாகிகள், தோழமை கட்சி சகோதரர்கள், மஜக சகோதரர்கள் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!
நாகை. டிச.06., பாபர் மஸ்ஜித் வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்னிறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் ரயில் நிலைய முற்றுகைப் போர் எழுச்சியோடு நடைப்பெற்றது. இதில் பல்வேறு மதங்களை சேர்ந்த பொதுமக்களும, சமூக நீதி மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும், பிரநிதிகளும் பங்கேற்றனர். நாகை தெற்கு மாவட்ட மஜக சார்பில் நாகை இரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராடத்திற்கு மாவட்டச் செயலாளர் செ.செய்யது ரியாசுதீன் அவர்கள் தலைமை வகித்தார். மஜக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் மௌலவி. ஜெ.எஸ். ரிஃபாயி அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில கட்டுபாட்டுக்குழு உறுப்பினர் பாண்டியன், திராவிட கழக மாவட்ட செயலாளர் புபேஸ் குப்தா, விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிவானந்தம், அப்துல் கலாம் பேரியக்கம் நிறுவனர் பாரதி.செந்தமிழன் ஆகியோர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்கள். இப்போராட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லாஹ், மாவட்ட பொருளாளர் பரக்கத் அலி, மாவட்ட
மாநகராட்சியை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்ப்பு!
நெல்லை.அக்.16., மேலப்பாளையத்தில் வீடு மற்றும் கடைகளுக்கு அதிப்படியான வரி விதிப்பு நடவடிக்கைகளையும். டெங்கு ஒழிப்பில் மாநகராட்சி நிர்வாகம் மந்த நிலையில் செயல் படுவதையிம் கண்டித்தும் இன்று மேலப்பாளையத்தில் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக மாவட்ட செயளாலர் A.கலீல் ரஹ்மான், மாணவர் இந்தியா மாவட்ட செயளாலர் யூ.வாசிம் முபாரக் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #நெல்லை_மாவட்டம்
ரோஹிங்யா மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்…! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் சூளுரை…!!
சென்னை.செப்.23., மியான்மர் ராணுவத்தால் பாதிக்கப்படும் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு இந்தியாவின் அடைக்கலம் தர கோரியும், இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கிய அகதிகளை அமைதி திரும்பும் வரை அங்கு திருப்பியனுப்ப கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் M.தமிமுன் அன்சாரி MLA பேசியதாவது... ரோஹிங்ய அகதிகளை ஏற்கமாட்டோம் என இந்திய அரசு கூறியிருப்பதும் ஏற்கனவே தங்கியிருக்கும் ரோஹிங்ய அகதிகளை திருப்பி அனுப்புவோம் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுவதும் மியான்மர் சென்ற இந்திய பிரதமர் மோடி அங்கு நடைபெறும் இனப்படுகொலையை கண்டிக்காததும் வெட்கமானது, கண்டனத்துக்குரியது. இந்தியா சகிப்புத்தன்மைக்காக பெர் போன தேசம். கெளவுதம புத்தரும், திருவள்ளுவரும், விவேகானந்தரும், காந்தியடிகளும், பிறந்த தேசத்தில் உயிருக்காக போராடி தஞ்சம் கேட்டு வரும் மக்களை அகதிகளாக அனுமதிக்க மாட்டோம் என்பதும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே வங்காளதேசம், திபத் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு அகதிகளாக புகலிடம் தந்தது போல, ரோஹிங்யா மக்களுக்கும் அந்த வாய்ப்பு வழங்கிட வேண்டும். தனியரசு MLA பேசியதாவது... பௌத்த மதவெறி ஆசிய கண்டத்தை பாழ்படுத்துகிறது. பௌத்த மதவெறிதான் இலங்கையில் தமிழர்களை அழித்தது, இப்போது மியான்மரில் முஸ்லிம்களை அழிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தனது கடும்