வேலூர்.ஏப்.22., காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று 22/04/2018 மாலை 4.00 மணியளவில் வேலூர் மேற்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர்கள் , S.M.ஷாநவாஸ், T.R. முன்னா (எ) நஸீர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வாஸ் அக்மல், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன், MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட மருத்துவ அணி செயலாளர் C.அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் திருமங்கலம் #J_ஷமீம் அஹ்மத், INSAAF அமைப்பின் மாநில துணை செயலாளர் ஆலியார் அதாவுல்லா, நாம் தமிழர் கட்சி வேல்ராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாநில துணை செயலாளர் J.M.வசீம் அக்ரம், மாவட்ட துணை செயலாளர் I.S.முனவ்வர் ஷரிப், ஆம்பூர் பிர்தோஸ், வாணியம்பாடி நயீம் கான் ஆகியோர் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில் சிறுமி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
ஆசிஃபாவுக்கு நீதி கேட்டு கோவையில் மஜக ஆர்ப்பாட்டம்!
கோவை.ஏப்.22., காஷ்மீரில் 'இந்து ஏக்தா மன்ஜ்' அமைப்பை சேர்ந்தவர்கள் #ஆசிபா என்ற 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததை கண்டித்து இந்தியா முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. தமிழகம் தழுவிய அளவில் மனிதநேய ஜனநாயக கட்சி போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட மஜக சார்பில் #நீதிகேட்டு_போராட்டம் நடைபெற்றது. பல்வேறுபட்ட சமூகங்களை சார்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிபாவுக்கு நீதி கேட்டு மக்கள் முழக்கங்கள் எழுப்பினர். பத்து வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆசிபாவுக்கு நீதி கேட்டு பதாகைகளை தூக்கிய படியே நின்றனர். ஆர்ப்பாட்டம் நடந்த சாலை வழியே சென்ற பொது மக்களும் ஆங்காங்கே நின்று ஆசிபா படம் பொறித்த பதாகைகளை பார்த்து பதைத்து போய் ஒரு நிமிடம் நின்ற பிறகே சென்றனர். வந்திருந்த பல்வேறு சமூக மக்களும் சோகம் சூழ்ந்த முகத்தோடு நின்றுக் கொண்டிருந்தனர். சிறுமி ஆஷிபாவின் உடலை போன்று வடிவமைத்து கைகளிலேந்தி சாலையில் மஜகவினர் ஊர்வலமாக வந்ததை பார்த்த மக்கள் கண் கலங்கினர். மேலும் குற்றவாளிகள் போன்ற வேடம் தரித்து முகமூடி அணிவித்து தூக்கு கயிற்றை மாட்டி நால்வரை மஜகவினர் அழைத்து வந்ததை ஆங்காங்கே குழுமியிருந்த மக்களும், வாகனங்களில் சென்றவர்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். மஜக கிணத்துகடவு
ஆசிபாவுக்கு நீதி கேட்டு திருச்சியில் மஜக ஆர்ப்பாட்டம்..! கண்ணீர் சிந்திய இந்து சகோதரிகள்!
திருச்சி. ஏப்.21., இன்று (21.04.18) திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளோடு பங்கேற்றனர். தலைவர்களின் உருக்கமான உரைகளை கேட்ட பெண்கள் கலங்கினர். ஒரு இந்து சகோதரி கண்ணீர் விட்டு குமுறினார். இன்னொரு பெண்மனி சோகம் கப்பிய முகத்தோடு தன் குழந்தையுடன் வந்து பதாகைகளை ஏந்தி நின்றார். சுற்றுவட்டாரம் எங்கும் வாகனங்களை நிறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் இப்றாகிம்ஷா, தமிழக வாழ்வுரிமை கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் பெரியார் சரவணன், ஜமாத்துல் உலாமா மாநகர செயலாளர் சிராஜுதின் மன்பஈ, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் பிரபு, கிறஸ்துவ நல்லென்ன இயக்க பொருப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் அஸ்ரப், மாவட்ட துணை செயலாளர்கள் S.M ரபிக், ஷேக் தாவூத், பஷிர், அணி நிர்வாகிகள் சதாம், அப்துல் காதர், J.K காதர், மற்றும்
ஆஷிஃபாவிற்கு நீதிகேட்டு குடந்தையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!
குடந்தை ஏப்.21., காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆஷிஃபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று 20/04/2018 மாலை 6.00 மணியளவில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை , நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மாநில செயலாளர் ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா, மாநில செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத், மாவட்ட பொருளாளர் இக்பால் சேட், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் சிறுமி ஆஷிஃபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்,மேலும் இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களுக்கு கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென்று கண்டன கோஷங்கங்களை முழக்கமிட்டனர். இப்போராட்டத்தில் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என இருநூறுக்கும் மேற்ப்பட்ட மனிதநேய சொந்தங்கள் பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை வடக்கு 20.04.2018
ஆசிபாவிற்கு நீதிகேட்டு தோப்புத்துறையில் மஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்…!
வேதை.ஏப்.20., இன்று (20/04/2018) காஷ்மீரில் எட்டு வயது சிறுமி #ஆசிபா பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு நாகை தெற்கு மாவட்டம் ,வேதாரண்யம் வட்டம் தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. மஜக நகர செயலாளர் ஷேக் அகமதுல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான குழந்தைகள் உட்பட முந்நூறுக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டனர். இதில் சகோதரி ஆசிபாவிற்கு நீதிவேண்டும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான மரண தண்டனை வழங்கவேண்டும் உள்ளிட்ட பதாகைகளை சிறுவர், சிறுமியர்கள் ஏந்திய வாறு கோஷமிட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழிநுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேதை_நகரம் 20.04.2018