பாழடைந்த நிலைக்கு செல்லும் அரசு நூலகம் மேம்படுத்த உதவிய மஜக..!

கடலூர்.ஆக.30., லால்பேட்டை நகரில் அமைந்துள்ள அரசு நூலகம் நாளுக்கு நாள் பாழடைந்த நிலைக்கு சென்று கொண்டே இருந்த நிலையில் நூலக பொறுப்பாளரை சந்தித்து #மனிதநேய_ஜனநாயக_கட்சியினர் தாமாக முன் வந்து மேம்படுத்த உதவுவதாக கூறினர்.

அதனை தொடர்ந்து இன்று காலை முதற்கட்டமாக நூலகத்தில் பழுதான டியூப் லைட்கள் மற்றும் மின்விசிறிகள் (பேன்) போன்றவைகளை புதியதாக வாங்கி கொடுத்தனர்.

இந்நிகழ்வின் போது மாவட்ட செயலாளர் ஜாகிர், குமராட்சி ஒன்றிய செயலாளர் அலி, துபை மாநகர செயலாளர் ரஹமத்துல்லா, அபுதாபி மண்டல செயலாளர் தையூப், அபுதாபி மண்டல துணை செயலாளர் சாதுல்லா, மாணவர் இந்தியா லால்பேட்டை நகர பொருளாளர் முஹம்மது ரில்வான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#கடலூர்_தெற்கு.