நாச்சிக்குளத்தில்… பாலஸ்தீன ஆதரவு நாள் முழக்கம்! மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் பங்கேற்பு…

ஏப்ரல்.05.,

இன்று சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து உலகமெங்கும் அல்குத்ஸ் தினம் என்ற பெயரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.

தமிழநாட்டில் இதனை ‘பாலஸ்தீன ஆதரவு நாள்’ என மனிதநேய ஜனநாயக கட்சி கடைப்பிடிக்கும் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

இன்று மஜக-வினர், ‘இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்’ என்ற பதாகை ஏந்தி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பொதுமக்கள், ஜமாத்தினர், சேவை அமைப்புகள் மஜக-வின் வேண்டுகோளை ஏற்று இப்பரப்புரையை பல இடங்களில் கூட்டமாக குழுமி பதாகை ஏந்தி பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களையும் எழுப்பி, அதை வலைதளங்களில் பதிவிட்டு ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இன்று ஜமாத் சார்பில் நாச்சிக்குளத்தில் – பெரிய பள்ளி வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு நாளை முன்னிட்டு பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

ஜமாத் நிர்வாகிகள் இதை வழிநடத்தினர்.

இதில் மஜக துணைப் பொதுச்செயலாளர் நாச்சிக்குளம். தாஜ்தீன் உள்ளிட்ட மஜக-வினரும் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவாரூர்_மாவட்டம்
05.04.2024.